Tuesday 19 May 2020

ஸ்ரீராம ஜெயம்


தி.ஜானகிராமனின் சிறுகதைகள்(முழுத்தொகுப்பு) வாசித்து வருகிறேன். சரளமாக வாசித்துச் செல்லக்கூடிய கதைகள். நவீனத்துவத்தின் இறுக்கம் கவிந்துவிடாத நேரடியான கூறல்  கொண்ட கதைகள். பெரும்பாலான கதைகளில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது. பாயாசம்,பரதேசி வந்தான்,கோயம்புத்தூர் பவபூதி,பஞ்சத்து ஆண்டி,குளிர், சிலிர்ப்பு என பல கதைகளில் வறுமையின் கையறு நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. மற்றொரு வகையான கதைகளில் காமத்தின் அலைகழிப்புகள் பேசு பொருளாகி இருக்கின்றன. பெரும்பாலும் வாலிப்பான உடல் கொண்ட இளம் விதவைகள் மீதான பச்சாதாபம் இக்கதைகளில் வெளிப்படுகிறது.சண்பகப்பூ, பசி ஆறிற்று, தூரப்பிரயாணம்,தவம்,ஆரத்தி போன்றவை இவ்வகை கதைகள். ஆனால் தி.ஜாவின் ஆகிருதி முதல் வகைக் கதைகளிலேயே பூரணமாக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. 

எளியோரின் பசி கண்டு துயர் கண்டு இரங்கும் அவர்களின் கையறு நிலையை கனிவுடன் எடுத்துச் சொல்லும் முதல் வகைக் கதைகளே அவர் எழுதியவற்றில் முக்கியமானவை என்று நினைக்கிறேன். பெரும்பாலும் கதைகள் நேரடியாகவே சொல்லப்பட்டிருந்தாலும் ஸ்ரீராமஜெயம் என்ற கதை அதன் மௌனத்தால் தொடர்புறுத்தும் தன்மையால் அபாரமான கலைப்பெறுமானம் பெறுகிறது. 



ஒரு அச்சகத்தில் மெய்ப்பு பார்க்கிறவராக இருபத்தாறு ஆண்டுகள் பணிபுரிகிறார் ராகவாச்சாரி. இருபதாண்டுகளாக அங்கு காவலராக இருக்கிறார் வேலுமாரார். வேலுமாராரின் பார்வையில் ராகவாச்சாரி மிகுந்த நேர்த்தியுடன் கட்டமைக்கப்படுகிறார். ஏழு குழந்தைகளின் தகப்பன் வறுமையில் உழல்கிறவர் யாரிடமும் பேச்சு கொடுக்காத கூச்ச சுபாவி என ராகவாச்சாரி ஒரு பரிதாபகரமான ஆளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டே வருகிறார். எப்போதும் அலுவலகத்துக்கு தாமதமாகவே வருகிறவர் தொடர்ந்து நான்கு நாட்கள் சீக்கிரம் வருகிறார். ஐந்தாவது நாள் விடுப்பெடுக்கிறார். ஆனால் அன்று இன்னும் சீக்கிரமாகவே அலுவலகம் வருகிறார். முதலாளியின் அறையில் இருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை திருடுகிறார். அதை வேலுமாரார் பார்த்து விடுகிறார். 

இக்கதையின் முக்கியமான அம்சங்கள் இரண்டு. ஒன்று கதை வேலுமாராரின் வழியாகவே சொல்லப்படுகிறது. வேலுமாரார் ராகவாச்சாரி அளிக்கும் நேர்மறை சித்திரம் மெல்ல மெல்ல உருமாறுவதும் இறுதியில் அவர் களவை வேலுமாராரை கண்டுபிடிப்பதும் கதையில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. இரண்டாவது அம்சம் ராகவாச்சாரியின் மௌனம். எப்போதும் தாமதமாக வருகிறவர் ஏன் நான்கு நாட்கள் வழக்கமான நேரத்தைவிட சீக்கிரம் அலுவலகம் வந்தார் ஏன் ஒரு நோட்டுப்புத்தகத்தை திருடினார் என்று யோசித்தால் அந்த பாத்திரம் ஆழம் கொள்கிறது. இயல்பிலேயே யாரிடமும் எதையும் கேட்டுவிடாத மனிதர். தான் கவனிக்கப்பட வேண்டும் என நினைக்கிறார் கவனிக்கப்படுவதன் வழியாக தனக்கு நோட்டுப்புத்தகம் வேண்டும் என்பதை உணர்த்த விரும்புகிறார். அது கவனிக்கப்படாத போது தயங்கித் தயங்கி அதைத் திருடத் துணிகிறார். அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத பொருளை ஒரு நிரந்தர ஊழியர் ஏன் திருட வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் கதை இன்னும் ஆழம் பெறுகிறது. அதற்கான பதிலாக கதைத் தலைப்பு வந்து நிற்கிறது. ஸ்ரீராமஜெயம். ஆம்! ராகவாச்சாரி ஸ்ரீராமஜெயம் எழுதவே நோட்டுப்புத்தகத்தை திருட நினைத்திருப்பார். அது திருட்டு கூட கிடையாது. எடுத்துச் செல்வது. ஆனால் அதைச் செய்யவும் அவருக்கு திட்டங்கள் தேவைப்படுகின்றன. அந்த எச்சரிக்கையே அவரை சிக்கவும் வைக்கிறது. ராகவாச்சாரி ஸ்ரீராமஜெயம் எழுதினால் கஷ்டங்கள் தீரும் என்று நம்பும் ஒரு காலத்தைச் சேர்ந்தவர். அவரது நியாயங்களை புரிந்து கொள்ளாத ஒரு சமூகம் உருவாகி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவருக்கு அது புரிவதில்லை. அவர் தீர்வுகள் வேறெங்கோ இருப்பதாக நினைக்கிறார். 

காலம் ஒவ்வொரு முறையும் அதன் இயங்குதளத்தை புரிந்து கொள்ள முடியாத ராகவாச்சாரிகளை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கிறது. எக்காலத்திலும் அப்படியானவர்கள் உருவாகியபடியேதான் இருப்பார்கள். அவர்கள் அத்தனைபேரின் உளநிலையையும் பிரதிநிதித்துவம் செய்வதாக இக்கதை உள்ளது. அதேநேரம் வாசகன் கற்பனையில் நிரப்பிக் கொள்ளும் இடைவெளியையும் முழுக்க உள்ளடங்கிய ஒரு கூறல் முறையையும் கொண்டுள்ளது இக்கதை. நான் வாசித்த சிறந்த கதைகளில் ஒன்று.

:) :( - குறுங்கதை



12 MAY 2020

(2.02AM)

Dei thoonkittiya

illa di :)

Mani rendaguthu. Innum thoongama enna da panra

En rendu manikku thoonkidanuma? Nee ivlo neram enna panriyam?

Enakku hubby irukkan athanala thoongala :(

Enna pannineenga

Ellam night la panrathu than

(அவள் போர்வைக்கு வெளியே தெரிந்த தன் கால்களையும் தன் கணவன் கால்களையும் படம் எடுத்து அனுப்பினாள்)

Nude a irukkiya

Ama ethukku kekkura?

Chumma imagine panna than. Eppavum matter pannittu nude a than thoonguviya?

Dei uthai vanguva?

Chumma sollu di



Kobama?

Athellam illa

Appo sollu

Avan thoongiduvan. Naan konja neram yosichuttu paduththuruppen. Appuram nighty pottu thoonguven.

Oh

Enna "oh"

Sari kobapadatha.

Dei inime ithu paththi yellam kekkatha.

Ketta enna?

Kekkathanna viden

En kekka kudathu nu sollu

Ithu enga personal

Oho

Enna da oho

Appo avan tarture panrathu mattum enkitta sonna
*torture

Athukku nu avan matter panrathaiyum unkitta sollanum


Enna da pesa matra?

Nee ennai asingapaduthura

Poda idiot

Seriously I feel dishonoured

Nee enna cheque a?

Nee ippo enna kindal panna arambichutta. Pannu

Baby...en da ippadi pesura I love you da baby chellam

Okay bye

Chellam please purinjikko

Enna purinjikkanum

Chellam pls da sorry sorry sorry ten thousand times sorry

M okay

Un okay sari illa da chellam

Ippo enna pannanum

Nee than sollanum unna lip la kiss pannava

I don't need your imaginary kisses. பக்கத்தில் படுத்திருக்கிறவனை பண்ணு. Bye

bye :(

13 MAY 2020
(1.05 AM)

Chel....la...meeee...umma


Dei pesuda pls

14 MAY 2020
(12.14AM)

Nee intha message reply pannalanna I am not gonna talk to you anymore

14 MAY 2020
(11.07PM)

(அவள் உறங்கிய பிறகு. அவள் கணவன் அவள் அலைபேசியில் வரும் செய்தியின் ஒலியைக் கேட்கிறான். அவள் விரல் ரேகைகளை வைத்து அலைபேசியைத் திறக்கிறான)

Sorry di

(அலைபேசியின் இணைய இணைப்பை அணைத்துவிட்டு அந்த உரையாடலை வாசிக்கிறான்.)

Paravalla

Ippo enna panra

Yosichuttu irukken

Enna yosikkira

Unkitta pesalama venama nu

Pesitte yosikkiriya

Ama

:)

Dei unakku enna evlo padikkum

Enna di ippadi kekkira

Chumma sollen

Romba pidikkum

Konjam explain pannu

Enna innikku ennamo mathiri pesura

Athellam onnum illa nee sollu How much you love me?

Naan innikku varai marriage pannikkathathukku nee than reason. I can't think of another woman

Nee romba emotional agurada

நெஜம்மா சொல்றேன் மா

Ana enakku marriage agiduche. Enakku husband paiyan ellam irukkangale

Athanala enna?

Dei unakku puriyalaya. I can't be with you. Unakku thevaiyanatha ennala kodukka mudiyathu

Enakku athu vendam

Pinna enna than da venum

Unnoda love. Ennai vida athigama nee vera yaaraiyum love pannala. Enakku athu pothum

Ana naan thinam night innoruththan kuda sex vachikkiren. Unna athu hurt pannuthu thane

Ama

Appuram en da ennai nenachittu irukka. Maranthuden

You don't have the right to say like this :(

Sorry da. Love you. Kisses and hugs.

Kisses and hugs.

(அன்றைய உரையாடலை மட்டும் தேர்வு செய்து அழிக்கிறான்.)


16 MAY 2020
(12.35AM)

(அவள் கைரேகையை எடுத்துக் கொள்கிறான்)

Dei

Enna thoongalaya

Thookkam varala da

En thookkam varala

Ellam unnala than

Naan enna panninen

Ippadi detached a pesatha da kashtama irukku

Vera eppadi pesanum

Paasama peso

Oho

Dei pls I love you

Ippo ethukku Ithave sollittu irukka

Unmaiya sollu unakku enna pakkum pothu kiss pannava hug pannavo thonatha

Ippo ethukku athellam

Pls sollu da

Thonum

Appo en enna nee kiss panrathe illa


Sollu da pls

Unakku ellamum naane sollanuma? Nee enna guilty a feel panna vekkura

Eppadi

Pls purinjikko

Sari puriyuthu

Naan nambamatten

Nee namba naan enna pannanum

Nalaikku office la enna kiss pannanum

Sari

Lips la

Okay

Good night da darling

Good night

16 MAY 2020
(10.17 PM)

Innikku enna office la romba dull a iruntha

Onnum illa di

Romba pannatha sollu di

Avan enna innikku kiss pannittan

Evan :)

Avan than di chumma theriyatha mathiri kekkatha

Sari eppo

Lunch appo

Sari nee enna pannina

Slap pannitten

Hmm

En di panni irukka kudathu

Neeyum thana avana love pannina

Athukku?

Antha advantage la kiss panni irukkan

Sari di naan avan kitta clear a pesira poren

Mm athu than sari. Enna pesa pora

Enna maranthuttu innoru ponna marriage pannikka solli

Hmm

Enna di ennala solla mudiyathu nu nenaikkuriya

Athellam solliduva ana atha sonna unga bonding strong agum

Vera enna panrathu?

Avoid him

Ethuvarai?

Avano neeyo vera office pora varai

Sari try panren

Un husband ethum doubtful a pakkurara?

Appadi theriyala di. Ana konjam bayama irukku. Naan avarukku ethum drogam panrena?

Don't be silly

Sari di bye. Ippo oru clarity kedacha mathiri irukku

Sari bye

Bye di

17 MAY 2020
(01.28 AM)

(அவன் அவள் அலைபேசியை எடுத்துப் பார்க்கிறான். பின்னர் ஒரு மெல்லிய புன்னகை அவன் முகத்தில் எழுகிறது. பின்னர் பெருமூச்சுடன் உறங்கச் செல்கிறான்)

17 MAY 2020
(02.34 AM)

Dei unakku rendu naala message panninathu naan illa

:)





Monday 4 May 2020

ஒளிர்நிழல் குறித்து அ.க.அரவிந்தன்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு,

நாவல் வாசித்த பின்னர் 'ஒளிர்நிழல்' பற்றிய பிறர் கருத்துக்களை பார்த்தேன் .அதில் ரஞ்சனி பாசு அவர்கள் எழுதிய கருத்துக்களும் என் அவதானிப்புகளும் சற்றே ஒத்திருந்தது.அதனால் அதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு சில கருத்துகளை எழுத விழைகிறேன்.

புயலிலே ஒரு தோணியில் ஆவன்னா என்ற ஒரு அத்தியாயமுண்டு.அதில் அந்த கதாபாத்திரம் ஒரு பெருங்கதையை சொல்லும்.எழுச்சி பெற்று வீழ்ச்சி அடைந்த ஒரு கதை அது.அதுதான் நாவலின் அடிநாதமென எனக்கு தோன்றும்.அதுதான் நாவலிலே நீண்ட அத்தியாயம் என்றும் நினைக்கிறேன்.

ஒளிர்நிழல் படித்தபோது அந்த நினைவு எட்டிப்பார்த்தது.ஆனால் இங்கு வீழ்ச்சியை மட்டும் அல்லது வீழ்ச்சிக்கு பின்னர் என்று நான் வரையறுத்துக்கொள்கிறேன். காத்தவராயன்,ராஜகோபால தேவர் சித்திரத்தை வைத்து இதை செய்கிறேன்.
எஞ்சும் சொற்கள் முன்னுரை என்று நினைக்கிறேன். நீங்கள் கதை சொல்லும் யுத்திக்கு முக்கியத்துவம் தருபவன் அல்ல என்று சொன்னீர்கள்.நாவலை படிக்கும் எவருமே அதை ஆமோதிக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

ஒரு பெரிய வேலியமைத்து அதனுள்ளே நீங்கள்  மாட்டி, பின்னர் வெகுலாவகமாகவும் அறிவுப்பூர்வமாகவும் தவ்வி வந்ததுபோல தோன்றியது.நம் தமிழ்சினிமா போல நம் இலக்கியமும் இருந்துருந்தால் அல்லது பல கோடி மக்களால் இதை அணுகமுடிந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப்பார்தேன்.நிச்சயமாக நாவலில் பேசப்பட்ட இரு இனங்களினாலும் நீங்கள் தாக்கப்பட்டிருப்பீர்கள் என்றே தோன்றியது.தவறாக உள்வாங்க அனைத்து சாத்தியமும் உண்டு என்று தோன்றியது.

'அவரவர் சரி அவரவருக்கு' என்ற தங்களின் வரியை எவரும் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.(அவ்வாறு நிகழ்ந்திருந்தால்).

நான் தங்களின் சிறுகதை வழி நாவலை அடைந்தாலும் சில அதிர்ச்சி இருந்தது தான்.ஒவ்வொரு அத்தியாயமும் முடியும்போதும் சற்றே 'பக்' என்றுதான் இருக்கிறது. தங்களின் சிறுகதையை விட ஒருபடிமேலாக.





முதலில் நாவல் வாசித்த பின்னர் ஒன்றுமே நிற்கவில்லை.தங்களின் கதை சொல்லும் முறையும்,மொழியும் தான் காரணம் என்று நினைக்கிறேன். விளைவாக மீண்டும் முக்கிய பகுதியென நான் எண்ணுவதை வாசித்தேன். ஒரு டார்சை வைத்து ஒரு சித்திரத்தில் மீது விட்டு விட்டு அடித்துக்காட்டுவதுபோல ஒரு உணர்வு. சிறுக சிறுக மண் சேர்த்து அதை மலையென குவித்து தானே தின்று செத்துபோனார் என்று முருகையன் கதாபாத்திரத்தை முடிக்கிறீர்கள்.
இது ஒரு பெரிய கனவு சிதைந்து வீழ்வதை காட்டியது.குணாவும் குரூப் 2 என்று சொல்லி பி.சி வரை செல்கிறான்.அது அனைத்துமே தங்களின் கதை சொல்லும் யுத்தியால் முதலில் கடந்துபோய்விட்டேன்.கதை சொல்லும் முறையின் வெற்றி அல்லது உச்சம் என்று நான் எண்ணுவது அனைத்து கதாபாத்திரமும் யார்,யாருக்கு,என்ன சொந்தம் என்று கண்டைவது முழுக்க முழுக்க வாசகனின் முயற்சியால் மட்டுமே அதனால் நாவலின் மீது எனக்கு ஈர்ப்பே உண்டாயிற்று.

குடும்பம் சார்ந்த சிக்கல் என்று என்னால் வரையறை செய்யமுடியவில்லை தங்களின் சிறுகதையைபோல. மாறாக ஆண் பெண் உறவு சிக்கலே அதிகம் வருவதாகப்பட்டது.சக்தி எழுதிய எதிர்சாத்தியதை வைத்து மதிப்பீட கூடாது என்று படுகிறது.ஒருவேளை அருணாவுக்கு சுந்தராலோ,சந்திரசேகரலோ சில கசப்பை அவள் எதிர்கொண்டால் அது குடும்ப சிக்கல் சார்ந்தது என்று வரையறை செய்திருப்பேன் என்று நினைக்கிக்றேன். அதே போல் தான் அனைத்து கதாபாத்திரத்திற்கும் என்று நினைக்கிறேன்.

அம்சவள்ளி முருகையனிடம் சபலம் கொள்வது மிக துல்லியமாக வந்து செல்கிறது.(அது சக்தி அருணா மீது கொள்ளும் சபலத்தை புரிந்துகொள்ள என்றும் நினைக்கின்றேன்)அதுபோல சக்தி தன் வருங்காலத்திற்கு அருணாவால் பாதிப்பு வரலாம் என்று எண்ணுகிறான் மற்றும் உரையை நிகழ்த்திய பின்னர் காருக்குள் சென்று சிரிப்பது.இது எல்லாமே சட்டென்று ஒரு துளி விஷமாக பட்டது.  நாவலின் நடுநடுவே வரும் சில விமர்சன கருத்துக்கள் எனக்கு மிகவும் பகடியாக பட்டது.அவ்வாறு சொல்ல சொல்ல வேறு சாத்தியம் என்ன என்று தான் யோசனை செய்ய வைக்கிறது.ஒருவர் ஒரு கருத்து சொல்லும் போது இயல்பாக மணம் வேறு எதிர் கருத்தை தேடுவதை போல அது நிகழ்ந்தது.கவிதையும் ,உரையும் , எதிர்சாத்தியமும் உச்சங்கள்.கீழறக்க முடியாத ஒரு ஆர்வம் நாவலின் மீது வருவதற்கு  அது முக்கிய காரணமாகிறது கதை சொல்லும் முறையுடன்.நானும் கிராமத்தான் என்பதால் கிராம இளைஞர்கள் சாதி கட்சியின்  பலி கேட்கும் கூர்வாளை நீட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை பார்க்கிறேன்.மிக்க சரியென்று ஆமோதித்தேன்.அனைத்து கதாபாத்திரத்திலும் ஒரு க்ரெய் டச் வைப்பது தங்களின் ஸ்டைலோ என்று நினைக்கிக்றேன்.அதனால் தான் என்னவோ ஒரு பெரிய அன்போ கருனையோ பாத்திரம் கோரவில்லை.

குறையென்று சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை என்றாலும் ஒரு சில என் உணர்வுகளை மட்டும் பகிர்கிறேன்.

நாவலில் கதைசொல்லும் முறை அதிவேகமாக இருந்தது அல்லவா அதனால் கதாபாத்திரம் எளிதில் மனதில் நிற்கவில்லை.(மீள்வாசிப்புக்கு காரணம் அதுவே).

உரையாடல் அதிகம் இல்லாததால் கதாபாத்திரத்திம் சற்றே தள்ளிதான் நிற்கிறது(இதை நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள் என்று நினைக்கிக்றேன்).நாவல் பலரில் வாழ்க்கையை திட்டவட்டமாக கண்முன் காண செய்ய முயற்சிக்கிறது அதனால் இது அவசியமென்றே தோன்றுகிறது. கவிதையும் ,உரையும் ஒரு உரையாடலாக மாறி நெஞ்சில் நிற்கிறது. அதனால்தான் கவிதையை உரையாடலாய் மாற்றும் சக்திக்கு பெரும்பங்கு இருப்பதாக படுகிறது.கதாபாத்திரம் ஒன்றொடு மற்றொன்று உரையாடல் நிகழ்ந்தும் போது ஒரு புதிய வாசிப்பை நாவலில் நிகழ சாத்தியமிருந்திருக்கும்  என்று படுகிறது.(அதை தவிர்பது தான் உங்களின் யுத்தியாக இருக்காலம் )

சக்தியோ,ரகுவோ,கதைசொல்லியோ தங்களின் திறமையால் வாசகனை கட்டுகிறார்கள். அதனால் வாசகனுக்கு ஆமோதிக்கவே தோன்றுகிறது என்று நினைக்கின்றேன்.ஒருவேளை ஒரு கதாபாத்திரம் மீது இணக்கம் ஏற்பட்டு அதன் வழி முரண் வந்திருந்தால்.நான் செல்லும் தூரம் அதிகரித்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஒரு உரையில் நீங்கள் சொன்னீர்கள் 'சிறுகதை என்பது ஒருவகையாக விளையாட்டு போல தான் ஆனால் நாவல் அவ்வாறு அல்ல என்று'ஆனால் அந்த விளையாட்டை இங்கும் சற்று நிகழ்த்தியதாக பட்டது.

தவறான நம்பிக்கையின் மீது எழும் தற்பெருமை உண்மையைச் சந்திக்க நேரிடின் தன்னியள்பாக மாறிவிடும்.

                                                     -பா.சிங்காரம்
அவரவர் சரி அவரவருக்கு
                                                    -சு.பி

இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும்  இடையே காலத்தின் வளர்ச்சியை இங்கு நினைவுகூற தோன்றியது.முற்றிலும் நேர் எதிர் கருத்துக்கள் நிறைந்து,மாற்று விளிம்பியங்களும், கதைசொல்லும் முறையும் ,வேறு  வேறு குறல்களும் ,யுத்திகளும் 
காலத்தால் பெற்றெடுக்கப்பட்டதை இங்கு நன்கு உணர்கிறேன்.
(அதனால் தங்களின் கதை சொல்லும் முறையை நான் குற்றம் சொல்லவில்லை)

என்னை கட்டிக்கொண்டு வரிகளில் ஒன்று:

மன்னிக்கமுடியாதவற்றை மறப்பதற்கு ஒரே வழி அதை அப்படியே திரும்பச்செய்வது தான்.
                                              -சு.பி

அ.க .அரவிந்தன்.