Wednesday 22 April 2020

என் சிறுகதைகள் குறித்து அ.க.அரவிந்தன்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு:

நான் ஐந்து வயது குழந்தை இலக்கியத்தில். சில தினங்களுக்கு முன்பு முகநூலில் உலாவுகையில் உங்கள் 'ரக்த மணம்' கதையை படிக்க நேர்ந்தது.சற்று முன்னதாகவே நீங்கள் எனக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது.கதையின் முடிவிலிருந்த விலாசத்தை பார்த்துவிட்டு துணுக்குற்றேன்.பின்னர் யூட்டூபில் உங்கள் உரைகள் அனைத்தையும் பார்த்தேன்.நீங்கள் திருவாரூர் என்பதால் அந்த துணுக்குற்றல்.டெல்டா மாவட்டங்களில் நிலம் சார்ந்தும் ,மொழி சார்ந்தும் வேறுபாடு இல்லை என்று கருதுகிறேன். ஆம் ,நான் தஞ்சாவூரின்,திருக்காட்டுப்பள்ளி என்னும் சிற்றூர். கோவில்வெண்ணி கிராமத்தில் பொறியியல் இறுதி ஆண்டு படிக்கிறேன்.

'ரக்த மணம்' மிகவும் பிடித்த கதையாக இருந்தது.பிற டெல்டா படைப்பாளிகளை நான் படித்ததில்லை. முகநூலில் பின்தொடருகிறேன்.உண்மையில் உங்கள் பெயரை நான் சுநில் கிருஷ்ணன் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.ஆனால் படித்ததில்லை..
ரக்த மணம் தொடர்ந்து தங்களின் முதல் தொகுப்பான 'நாயகிகள் நாயகர்கள்' கிண்டலில் வாங்கி வாசித்தேன்.அதனால் அதை பற்றியும் இன்னும் சில உங்கள் சிறுகதை பற்றியும் வாசித்த அனுபவத்தையும் மற்றும் அவதானிப்புகளையும் பகிர விரும்புகிறேன் அல்லது ஏதோ ஒரு வகையில் தங்களது கதைகளை வகைபடித்திக்கொள்ள விழைகிறேன்.

'நாயகிகள் நாயகர்கள்' வாசித்தபோது  பெருந்தேவி அவர்களின் ஒரு கவிதை மனத்திரையில் வந்தது.

ஒவ்வொரு முக்கிலும்
பலிகளைக் 
கேட்டும் கொண்டும் 
நகர்கிறது குடும்பத்தேர் 
மயானத்தை நோக்கி.

உங்கள் கதைகளின் மாந்தர்கள் மிக எளிய மனிதர்கள்.மிக நெருக்கமாக அன்றாட பார்க்கும் ,பழகும் மனிதர்களாக இருக்கிறார்கள். நவினவாழ்க்கையின் தொடர் இன்னல்களில் உழலும் மனிதர்கள்.இதை பெருவாரியான கதைகளில் தொட முடிகிறது.இதில் தங்களது கதை முடிவு பெறவில்லை. அதாவது எஞ்சும் சொற்கள், ரக்த மணம் போல முடிவு ஒருவகை நிறைவை தருவதில்லை. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கதையின் பிரதான பாத்திரம் தப்புவித்து ஓடுகிறது(அலுங்களின் நடுக்கம் , அம்மா வீட்டில் இல்லாதபோது) அல்லது நின்று விழிக்கிறது(சொட்டுக்கள்).

என் நினைவு சரியென்றால் ஒரேயொரு அம்மாவுக்கு மட்டும் தான் நீங்கள் பெயர் வைத்துள்ளீர்.(வாசுகி)
பொதுபடுத்துவது மூலமாக ஒரு பலகுறல் தன்மை வருகிறது. சொட்டுகள் கதையில் அம்மாவுக்கு ,அவளுக்கும் பெயர் இல்லை.அதனால் அது சட்டென்று தீண்டுகிறது என்று நினைக்கிறேன். பின்னர் இதிலுள்ள நவினமனம் என்பது அவள் தோல்வி அடையவிரும்புவதில்லை என்று பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவள் அன்னை தான் ஆனால்  அவள் தன் அம்மாவிடமும் ,பிள்ளையிடமும் தொல்வியை தழுவ விரும்புவதில்லை.
அதேபோல 'குற்றுளம் 'கதையில் அவன் அம்மாவை யேசும் பெண்ணை உதைகிறான்.அது அவனை அவமானபடுத்துவதாக எண்ணுகிறான்.அங்கு அவன் தன்னை வெற்றி அடைந்தவனாக எண்ணி தோற்றுவீழ்கிறான்.

அது சில்ற கதையில் அற்பதனமாக  வெளிபடுகிறது.ரஞ்ஜனிக்கும்,நவினுக்கும் உள்ள உறவை சில்ற எனகொண்டால்.சில்ற பெட்டியை வீசியவுடன் அவன் அடைவது விடுதலை.அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டதற்கான குறியீடு என்றும் நினைக்கிறேன்.அம்பிகாவை ஏமாற்றுவது சில்ற என கொண்டு சிதறியதை அள்ளுகிறான்.

நன்கு கூரிய வார்த்தைகளாலும்
மொழியின் உச்சத்தினாலும் முழுதும் படிக்காத உணர்வே மேலெழுகிறது.அது வலுசேர்க்கும் விதமாகவும் அமைகிறது.அகம்,எல்லாவற்றையும் மீண்டும் தொடங்குதல்,கண்ணாடிச் சில்லுகளும் கருங்கூழல் நோட்டுகளும் ஆகிய கதைகளில் தெரிகிறது மொழியின் கூர்மை.அகம் கதையின் புறம் எழுதப்படவேண்டும் என்பதை உங்களின் கருத்தாக கொண்டால்.நீங்கள் அதை 'உடனிருப்பவன்' கதையின் அடைகிறீர் என்று யூகிக்கிறேன்.'கண்ணாடி சில்லு...' கதையின் அகமனிதன் புறமனிதனை ஓடவிடுகிறான்.புறமனிதன் தோல்வியுற்று வெளியேறுகிறான்.ஆனால் 'உடனிருப்பவன்'கதையில் அகமனிதனும் புறமனிதனும் சமரசம் செய்துகொள்கிறார்கள் அல்லது அதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். கதையின் நடுவில் அகமனிதன் நல்லவன். கடையில் புறமனிதன் நல்லவன்.அந்த இடம் நீங்கள் கண்டுணர்ந்ததாக ,சென்றடைந்ததாக எண்ணுகிறேன்.

அகம் கதையின் வரும் சுகனும் ,வதை கதையின் சுகனும் ஒன்று என்றால் அகம் சுகன் வென்று விடுகிறான் ,வதை கதையில் தோல்வி.

சிறுவர்களின் ஏமாற்றத்தை தொடும் கதையாக பெரியம்மாவின் வீடு,அம்மா வீட்டில் இல்லாத போது ,பிரைமரி கம்ப்லெஸ் முதலிய கதையை கொண்டால் 
இவ்வகை கதையில் மட்டும் நெகட்டிவ் தன்மை இல்லை என்று நினைக்கிறேன். மத்த கதையில் அனைத்தும் ஒரு வகையாக grey side வருவதாக தெரிகிறது.ஏமாற்றம் என்னும் வார்த்தை நிலையற்றதாக எண்ணுகிறேன். அம்மா வீட்டில் இல்லாத போது கதையில் அவன் 'என்னிடம் சொல்லிவிட்டு செய்யேன்' என்ற மனநிலையில் இருக்கிறான் பெரியாம்மாவின் வீடு கதையில் அவன் வீட்டிற்கு சொல்லாமல் அழைத்து செல்லபடும் போது ஏமாற்றம் அடைகிறான்.
ஏமாற்றத்தின்  நிலையின்யால் ஏற்படும் ஒரு நிம்மதி.நிரந்தரத்தில் கிடைபப்பதில்லை. 

ஆண் கதைமாந்தர்கள் அதிகமாக இருந்தாலும் பெண் பற்றிய கருதுகோள்களால் மோதவிட்டு தத்திளிப்பதாக தெரிகிறது.நவினமனம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாக தெரிகிறது.
'அய் நீட் யூ ' என்று சுகன் சொல்லும்போது அவள் பொருள்கொள்ளவில்லை.
பின்னர், வதை கதையில் அவனுக்கு நினைவிற்கு வருவது பெண்கள் தான்.

உங்கள் கதையின் 'பார்கவி' கதைதான் சொல்லகூடிய கதை, மற்ற கதையை சொல்லி புரியவைக்க முடியாது என்று தோன்றுகிறது.
'ராஜராஜ சோழன்  நான்' என்று மணி உணர்வதை வைத்து தான் அவனின் முழு சித்திரத்தையும் உருவாக்கி கொள்ள முடியும்.
அதே போல 'வதை 'யில் இந்த வீடு தன் தாத்தா அவரின் ஆசை நாயகிக்கு தந்தது என்று சுகந்தினி சொல்வது  காதபாத்திரத்தை உணர்ந்துக்கொள்ள உதவும் என்று கருதுகிறேன். இதை விட்டுவிட்டு சொன்னால் அது வேறும் மெல்லுணர்ச்சி கதையாக நின்றுவிடும்.

குற்றுளம்,சொட்டுகள், ஆகிய கதையில் நாய்யின் படிமம் வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு யானை போல உங்களுக்கு நாயோ? :)..
ஒரு குடும்பத்தின் கதையை sarcasticகாக நாயகிகள் நாயகர்கள் கதையில் எழுதியதாக படுகிறது.

முதல் தொகுப்பிலே 'எல்லாவற்றையும் மீண்டும் தொடங்குதல் 'கதையைதான் இறுதியில் எழுதபட்டதாக யூகிக்கிறேன். அதில் மெல்லிய பகடி இழையோடும்.எனக்கு பிடிந்த கதை அதுதான்.கவி என்பது இறுதியில் அவனின் அகத்திடம் நடத்தும் உரையாடல் என்றும் பொருள் படவைப்பது என்னை தொடும் ஒன்று.அது அவன் எழுதும் கதையென்றாலும் என்னை தொடும்.

எஞ்சும் சொற்கள் முடிவு ஒரு பெரிய அகதிரப்பை தந்தது.தாழ்த்தப்பட்ட மக்களின் அனைத்து மனநிலையும் நன்கு வெளிவந்த கதை.நான் grey side என்ற சொல்வது இதில் அவன் நல்லவன் புதியவன் என்று எனக்கு படுகிறது.ஆனால் 'உஷா உப்த்துப்' போல ஒரு பெண்ணை பார்த்து நசுக்க விரும்புகிறான்.இது போன்ற இடம் பெருவாரியான கதையில் இருக்கிறது.என்னை தொடும் இடமாக அது நினைவில் உறைந்து நிர்க்கிறது.

மொழி நன்கு வெளிபட்ட கதையாக 'ஒரு நாள் கழிந்தது' கதையை சொல்வேன்.அதாவது நிலத்தின் மொழி.வட்டார மொழி இல்லாத நிலம் என்றாலும் அதில் எழுத பட்டமொழி மிக இணக்கமாக இருந்தது எனக்கு.அதிலும் ஒரு நவினமனம் ,நவினவாழ்க்கையின் சிக்கல் நன்கு வெளிவந்துள்ளது.தன்னை selfi எடுத்து பார்த்து சோகப்படும் சித்தாள் என்பது நல்ல உதாரனம்.பத்தினியாக இருக்க வேண்டும்  ஆனால் மேஸ்திரி தன்னை அடைய முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கிறாள்.அபிராமி தான் மேஸ்திரி தன்னை மதியாதற்கு காரணம் என்று எண்ணி வேறுக்கும் இடம் மற்றோறு உதாரணம்.ஒரு தீண்டல் வேண்டும் ,தன்னை பிறர் கவனிக்க வேண்டும் , தன் பெயர் கெடகூடாது என்ற ஒரு வகையாக angst அவளுக்கு.

வெம்மை என்னை பெரிதும் ஈர்க்காத ஒன்று.குந்தியின் பயம் தான் காரணம் என்று மிக சிறிய விடயம் தான் என்னிடம் சொல்ல இருக்கிறது.ஜெயமோகனின் 'பத்மவியூகம்' அளவுகோள் இயல்பாக என்னுள்ளே.அதனால் இருக்கலாம்.

ரக்த மணம் இன்று அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சமர்ப்பணம் என்றும் தோன்றியது.ஒரு வகையில் அரசு ஊழியர்கள் வேறு சிலருக்கு சொல்லும் பதிலென்றும் நினைக்கிறேன்.குற்றவுணர்ச்சியில் அவன் உழலும் போது புணர்ந்த பெண்னை வன்முறை செய்கிறான்.இறுதியில் ஒரு நிறைவு பின் கைதி விடுதலையாகும் போது.

அகம் சார்ந்த வெற்றியே நவினமனத்தின் சாரமாகவும் ,தேவையாகவும் இருக்கிறது.இதில் நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால் 'வெளியேறவேண்டும்'.அவ்வாறு செய்வது ஒரு வகையான கொலைத்தனம் என்றால் வாழ வேண்டும்.வாழவேண்டும் என்றால் நிலையில்லாதாவற்றின் பலபொருளை ஏற்றுக்கொண்டு அல்லது எதையும் பொருள்கொள்ளாமல் வாழலாம்.'இது எல்லாதுக்கும் உள்ளதுதான், இப்டிதா விடு' என்று ஏற்றுக்கொண்டு.பெரிதாக பொருள் படுத்தாமல் இருக்கும் மனநிலைக்கு வந்து .இச்சிந்தனையை கைவிடுலாம் என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்
அ.க.அரவிந்தன்.

No comments:

Post a Comment