Posts

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் - 1

Image
யாரிடமோ பேசிக்கொண்டிருந்த போது அம்மா சொன்னார்.  "தேவிடியா வாக்கு...அப்படியே பலிக்கும் பாத்து நடந்துக்க". என் அம்மாவை இன்னொரு பெண்ணாக அன்றுணர்ந்தேன். அம்மா அப்படி சொன்னதன் திகைப்பு அடங்க நெடுநாள் ஆனது. ஆண்களை திறனையும் பெண்களை பாலியல் ஒழுக்கத்தையும் மட்டுமே கொண்டு அளவிடும் ஒரு கிராமத்துப் பெண்ணிடமிருந்து அப்படி ஒரு வார்த்தை எதிர்பார்க்கக் கூடியது அல்ல. இன்றைய இளைஞன் என்பவனின் அதிகப்டச கனவு ஒரு ஐரோப்பியனாகவோ அமெரிக்கனாகவோ தன்னை மாற்றிக் கொள்வது தான். ஒவ்வொருவரும் தன் வலுவுக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்றவாறு ஒரு "உயர் நாகரிகத்தை" அடைய முயன்றபடியே உள்ளனர். அது பெரும்பாலும் இன்னொன்றாக இங்கில்லாத மற்றொன்றாக தன்னை மாற்றிக் கொள்வதில் போய் முடிகிறது. முற்போக்கானவர்களாக மூட நம்பிக்கைக்கு எதிரானவர்களாக நாகரிகமானவர்களாக தன்னை எண்ணிக் கொள்ளும் ஒவ்வொருவரும்  வெற்றிகரமாக ஒரு ஐரோப்பிய கருத்தியலுக்குள் தன்னை பொருத்திக் கொள்ளக் கூடியதற்கான பயணத்தில் இருப்பவர்களே. நம் நவீன சமூகம் நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கல்வியால் உருவாக்கப்பட்டது. ஆகவே ஒரு சில குடும்ப பழக்கங்களைத் தாண்ட...

கோவில் பிரசாதமும் கொழுக்கட்டையும்

மஹா சிவ ராத்திரிக்கு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பது சென்ற வாரம் தான் எனக்குத் தெரிய வந்தது. மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி அது. அதுவு‌ம் வார இறுதியில் விட...

தேனுலகு - 2

சீறல் ஒலி தொடர்ந்து கேட்டது. நேரம் ஆக ஆக அவ்வொலி வலுத்தே வந்தது. முல்லை அதையே கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு சமயம் ஒலி திடீரென நின்று போகும். இனி பயமில்லை என ஆச...

வெண்ணிற இரவுகளும் எஞ்சும் இருளும் - ஒரு பயணக் கட்டுரை

Image
மூன்றரை மணிக்கு எழ வேண்டும் என்ற கவலையில் மூணு மணிக்கே விழிப்பு தட்டிவிட்டது. உலகின் பயங்கரமான மனிதர்களையும் பெருந்துயர் மிக்க மனிதர்களையும் என் கற்பனையில் நான் சந்திக்கும் தருணங்கள் இந்த அதிகாலைகள். ஒருவேளை இந்த தருணங்களை சுருக்கிக் கொண்டால் அந்த நாள் நலமுடன் நகருமென்பது ஒரு எண்ணம் மட்டுமே. இன்றும் மூன்று முதல் மூன்று நாற்பது வரை புரண்டு கொண்டே கிடந்தேன். வாட்ஸ்அப்பில் யாரிடம் இருந்தெல்லாம் செய்தி வந்திருக்கும் முகநூலில் யாரெல்லாம் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருப்பார்கள் மாமலர் தவிர்த்து ஜெ வெப்சைட்டில் என்னவெல்லாம் இடம்பெற்றிருக்கும் என இனிதாகத் தொடங்கி எதிர்காலத்தில் என்னவாகப் போகிறேன் தேய்ந்திருக்கிறோமா கூராகி இருக்கிறோமா எப்போது சாவோம் இப்போது ஏன் இருந்து தொலைய வேண்டும் என்பது வரை போதையான எண்ணங்கள் நீளும். "மணி மூணே முக்காலாச்சு எளுந்திரி" என அம்மா எழுப்பிய போது உண்மையில் மணி மூன்று நாற்பது தான். இதே அம்மா நான் அலுவலகம் கிளம்பும் போது ஏழே முக்காலை இரக்கமே இல்லாமல் "ஏள்ற தான ஆவுது. ஏன் பறக்கிற" என்று சொல்லும். வீடு கட்டி வரும் பிப்ரவரி அல்லது பெப்ருவரி...