ஒளிர்நிழல் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகப்போகின்றன. இந்த நாவலின் முதல் வாசகரான மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி நாவலை வாசித்து மெய்ப்பு பார்த்த ஹரன் பிரசன்னா மற்றும் பேராசிரியர் டி.தருமராஜ் ஆகியோர் மட்டுமே நாவல் குறித்து தங்கள் பார்வையை விரிவாக என்னுடன் பகிர்ந்து கொண்டனர். வாசிப்பதற்கு மெல்லிய சவாலை அளிக்கும் படைப்பு என்பதால் ஓரளவு இலக்கிய வாசிப்பு உடைய நண்பர்களிடம் இருந்தே எதிர்வினையை எதிர்பார்த்தேன். பின்னர் அவர்களுக்கும் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கும் போல என மிதப்பாக எண்ணிக் கொண்டேன். நாட்கள் நகர்ந்த போது "படித்துக் கொண்டிருக்கிறேன்" மற்றும் "புரியவில்லை" என்ற இரு பதில்களே நண்பர்களிடம் இருந்து அதிகம் வந்தன(நான் கேட்காவிட்டாலும்😊).
ஆசிரியரின் இந்த நீண்ட விமர்சனம் நானடைந்த பேறு. அதேநேரம் எல்லா விமர்சனங்களுமே வாசகர்களை நோக்கியதே. ஆகையால் ஒளிர்நிழல் வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு இந்த விமர்சனம் ஒரு புரிதலை அளிக்கும். வாசகனாக எனக்கும் இந்த விமர்சனம் எனக்கு அத்தகைய புரிதலை அளிக்கிறது.
http://www.jeyamohan.in/101425#.WZJ9PcvA7qA
No comments:
Post a Comment