Thursday 27 December 2018

முன்னுரை - எஞ்சும் சொற்கள்

கிழக்குப் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் என் இரண்டாவது சிறுகதை தொகுப்புக்கான முன்னுரை

கரைசேர்ந்தவை

பியோதர் தஸ்தாவெய்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் குறித்து செப்டம்பர் 2017ல் என் தளத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை வெளியான அன்றே எழுத்தாளர் கே.என்.செந்தில் அலைபேசியில் தொடர்பு கொண்டார். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் என நான் எண்ணும் ஒருவர் அழைத்துப் பேசுவது மிகுந்த மனநிறைவை கொடுத்தது. அதோடு இலக்கியம் குறித்த கறாரான மதிப்பீடுகள் கொண்ட ஒருவரிடம் பேசுவதால் ஏற்படும் மெல்லிய பதற்றமும் அவ்வுரையாடலின் போது இருந்தது. கபாடபுரம் இதழுக்காக ஒரு சிறுகதை அல்லது கட்டுரை எழுத வேண்டும் என கே.என்.செந்தில் கேட்டார். என் அலுவலகத்தில் தோழி ஒருவருக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் மனதின் ஒரு மூலையில் அப்போது கதை வடிவம் கொள்ளத் தொடங்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சில வாரங்களில் கதையை எழுதி அனுப்புவதாக ஒப்புக் கொண்டேன். அதன்பிறகே ஒருவருடைய தனிப்பட்ட அனுபவத்தை அதுவரை கதையாக்கியதில்லை என்பதும் நான் மதிக்கும் ஒரு எழுத்தாளர் என்னிடம் இப்படியொரு கோரிக்கையை வைத்ததில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இப்படியான சில சிறு சவால்களுடன்  இத்தொகுப்பின் முதல் கதையான வீதிகளை எழுதினேன் . 




நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பு வெளியாவதற்கும் வீதிகள் கதை எழுதப்படுவதற்கும் இடையேயான மாதங்களில் நான் எழுதிய சிறுகதைகளின் மீதான ஆழ்ந்த சந்தேகங்களை வீதிகள் ஏற்படுத்தியது. வீதிகளுக்குப் பிறகு எழுதிய கதைகளே இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.அக்டோபர் 2017ல் இருந்து ஏறக்குறைய ஓராண்டு இடைவெளியில் இக்கதைகளை எழுதியிருக்கிறேன். வடிவம் உத்தி போன்றவற்றின் மீது அதிகப்படியான கவனத்தை செலுத்துகிறவன் என்று நான் அறியப்படுவதாக நண்பர்கள் சொல்லும்போது புன்னகைக்கவே தோன்றுகிறது. அவர்களுக்கு எப்போதும் தரும் உறுதிமொழியை இந்த முன்னுரையிலும் குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும். வடிவத்திற்கென மெனக்கெடுவதோ கதையை எழுதிய பிறகு "சிதைத்து" வடிவப்புதுமைகளில் ஈடுபடுவதோ என் எழுத்துமுறை அல்ல. மேலும் எழுதப்பட்டுவிட்ட ஒரு கதையை எழுத்துப்பிழைகளை பொருள் மயக்கங்களை சரிசெய்வதைத் தாண்டி மேம்படுத்திவிட முடியும் என்பதிலும் எனக்குப் பெரிதாக நம்பிக்கையில்லை. ஆனால் வடிவச்சிதைவு என்பது சிறுகதையின் இயல்பான பரிணாமமே. வாழ்க்கை நிகழ்வுகளில் நேர்க்கோட்டினை கற்பனை செய்து அதன்படியே வாழக்கூடிய வரம் பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்காதவர்களில் ஒருவனின் அல்லது நேர்க்கோடு என்பதன் மீது தீராத சந்தேகங்கள் கொண்ட ஒருவனின் எழுத்தாகவே என் எழுத்தினை அடையாளப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.  

முழுமையாக யதார்த்த தளத்தில் இயங்கும் எஞ்சும் சொற்கள்,பரிசுப்பொருள்,வீதிகள் போன்ற கதைகளை தொடக்கத்திலும் அபி,ஆழத்தில் மிதப்பது,வரையறுத்தல் போன்ற வடிவச்சிதைவு கொண்ட கதைகளை ஒரு கட்டத்திலும் எழுதியிருந்தாலும் இத்தொகுப்பில் உள்ள கதைகளின் இயங்குதளம் எப்படியானது என்று என்னால் வரையறுத்துக் கொள்ள இயலவில்லை. எழுத்தாளனின் வேலை அது இல்லை என்றாலும் கூட இத்தொகுப்பில் உள்ள புனைவுகளை சரியாக வரையறுத்து நிறுத்தும் விமர்சகனுக்காக மெல்லிய ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்!

என்னளவில் என் புனைவுலகை சற்று புனைவுத்தன்மையுடன் இவ்வாறாக வரையறுத்துக் கொள்கிறேன்.  உடைமைகள் அனைத்தையும்  கடற்சீற்றத்தில் இழந்து உயிர்தப்பி கரையில் அமர்ந்திருக்கும் ஒரு வணிகனைப் போல கதைகளுக்காக நான் காத்திருக்கிறேன். அலைகள் கொண்டு வந்து கரைசேர்க்கும் உடைமைகளின் மிச்சங்கள் போல இக்கதைகள் என்னிடம் வந்து சேர்கின்றன. பயன்படுத்த முடியாதவை விற்க முடியாதவை. முன்பும் இவை என்னுடன் இருந்தன.  நான் இவற்றுக்கு ஒரு பொருளை கற்பித்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு சீற்றத்தில் சிக்கித் தப்பியபின் இப்பொருட்கள் முழுமையாக வேறுவகையாக பொருள்படுகின்றன. முன்பிருந்தது போல அல்லாமல் கற்றுக் கொண்டவற்றின் பெற்றவற்றின் இழந்தவற்றின் சாட்சியங்களாக மாறிவிட்டிருக்கின்றன. திரும்பி வந்திருக்கும் இக்கதைகள் ஒவ்வொன்றும் எனக்கு கற்பித்தன. என்னை எனக்குக் காட்டித் தந்தன. இக்கதைகளுக்கென இவ்வருடத்தில் வந்த வாசக எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது இக்கதைகள் பலருடன் உரையாடியிருப்பதை உணர முடிகிறது. அத்தகையதொரு உரையாடலின் முழுவடிவமாகவே இத்தொகுப்பினை நான் காண்கிறேன்.  



இக்கதைகள் வழியாக என்னுடன் உரையாடிய எழுத்தாளர்கள்,வாசகர்களை இங்கு குறிப்பிட்டால் அதுவே ஒரு நீண்ட பட்டியலாகிவிடும். அவர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும். பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற கதைகளை எழுதிய போது என்னைக் கண்டித்து எழுதும் போது இருக்க வேண்டிய பொறுப்பான மனநிலையை எனக்கு உணர்த்திய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி. இத்தொகுப்பில் உள்ள கதைகளை வெளியிட்ட கபாடபுரம்,சொல்வனம்,காலச்சுவடு,வல்லினம் இதழ்களுக்கு நன்றி. வெளியிடும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் ஹரன் பிரசன்னாவுக்கும் நன்றி. 

சுரேஷ் பிரதீப் 

04.12.2018

சமர்ப்பணம் 

எழுத்தாளர் அசோகமித்திரனின் நினைவுக்கு

Tuesday 18 December 2018

ஈர்ப்பு - பகுதி இரண்டு

6

வெகு நேரமாக அடக்கி வைத்திருந்த இருமல் வலுவாகத் தாக்கியது. கணினியின் முன் அமர்ந்திருந்தவன் கீபோர்டில் தலை வைத்து சரிந்து விட்டான். அறை எந்த ஒழுங்கும் இல்லாமல் கிடந்தது. எல்லா பொருட்களிலும் மண் படிந்திருந்தது என்பதை உணர்ந்த போது இருமல் அதிகரிப்பது போல அவனுக்குத் தோன்றியது. ஏதோ நினைவு வந்தவனாய் அலைபேசியில் தேதியைப் பார்த்தான். பிறந்த நாள் கடந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. ஒருவர் கூட அவனை வாழ்த்தியிருக்கவில்லை என்பது ஆசுவாசமாகவும் சற்று ஏமாற்றமாகவும் இருந்தது.

ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனம் உந்தியது. குடிக்கப் பழகிக் கொண்டிருக்க வேண்டும் என்று இப்படி நிலைகொள்ளாத நாட்களில் தோன்றுவது போல அப்போதும்  தோன்றியது. தொடர்பிலிருக்கும் ஒரு சிலரில் யாரையாவது அழைத்துப் பேசலாமா என்று எண்ணினான்.

என்ன பேசுவது? எதைப் பற்றி பேசுவது? பேசுகிறவனுக்கு கல்யாணம் ஆகியிருக்கும். எத்தனை குழந்தைகள் அவை எங்கே படிக்கின்றன மனைவி என்ன செய்கிறாள்? குழந்தைகள் பெற்ற பின்னும் அழகாக இருக்கிறாளா? உன் வீட்டுக்கு வந்தால் என்னை மனம் கோணாமல் வரவேற்பாளா? உன் பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? உனக்கே முப்பத்தைந்து வயது ஆகப் போகிறது இன்னுமா சாகாமல் இருக்கிறார்கள்? வருத்தப்படாதே சீக்கிரம் செத்துவிடுவார்கள்.

மீண்டும் கணினியின் முன் நிமிர்ந்து அமர்ந்தான்.

இல்லை என்னால் இப்போது யாரிடமும் பேசிவிட முடியாது. கீறப்படாத தோல்களுடன் தான் சமூக மனிதர்கள் உரையாடுவார்கள். நான் அப்படியல்ல. நான் ஒரு கணவனோ தகப்பனோ சமூக மனிதனோ அல்ல. நோயாளி நாற்பது வயதை நெருங்குகிறவன். அப்பாவும் அம்மாவும் நண்பர்களும் இல்லாதவன். சமூகத்தின் பார்வையில் உதிரி. 

இந்த அடையாளங்களுடன் உங்கள் முன் வந்து நின்றால் நீங்கள் என்னை ஏற்கப் போகிறீர்களா என்ன? ஒரு காலத்தில் என்னை ஏற்றுதானே வைத்திருந்தீர்கள்? எனக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக உங்களில் எத்தனையோ பேர் சொன்னீர்கள் தானே? அதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று இந்த அழுக்கும் தூசியும் நிறைந்த குளிர்ந்த அறையில் அமர்ந்து யோசித்துப் பார்க்கிறேன். இன்றிருப்பது போல இவை அப்போதே தெளிவாக இருந்திருந்தால் நான் உங்களனைவரையும் விட மிகச்சிறந்த சமூக மனிதனாக இருந்திருப்பேன் தெரியுமா. கல்லூரி முடித்தவனுக்கு பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்கள் சுலபமானதாக தோன்றுவது போல என்கிறீர்களா?

நான் உங்கள் முன் தோன்றும் போது அதாவது நமக்கிடையே உறவென்று ஒன்று உருவாகி வரும் போது நீங்கள் உத்தேசிப்பது என்ன என்பதை நான் தெளிவாக உணர்கிறேன். இவனால் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டுவிடாது இவனது அதிகாரத்துக்குள் நாம் இல்லை இவன் எவ்வகையிலும் நம்முடைய மனைவிகளை மகள்களை எடுத்துக் கொண்டு விட மாட்டான் என்ற நம்பிக்கை தோன்றிய பிறகுதான் நீங்கள் அன்புடன் பழகத் தொடங்குகிறீர்கள். அவனது சொற்களை கேட்கிறீர்கள் அவனுக்கு உங்கள் சொற்களை கொடுக்கிறீர்கள். எனக்கும் கொடுத்தீர்கள். 

என்னை எப்போது நீங்கள் நீங்கத் தொடங்கினீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? இருக்கும் ஆனால் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். ஏன் காட்டிக் கொள்ள மாட்டீர்கள் தெரியுமா? ஏனெனில் நீங்கள் எப்போதுமே உங்களை நல்லவர்களென்றும் அப்பாவிகளென்றும் கீழ்மைகளுக்கு எதிராக கோபம் கொள்ளக்கூடியவர்கள் என்றும் உங்களை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போலவே எண்ணிக்கொள்ளும் மற்றொருவர் என்னைப் பற்றி உங்களிடம் ஒரு மெல்லிய சந்தேகத்தை எழுப்புகிறார். உடனே உலகின் நல்லறங்கள் பாதிக்கப்பட்டுவிட்டதாக நான் அவற்றை கலங்கப்படுத்திவிட்டதாக எண்ணி என்னை ஒதுக்கத் தொடங்குகிறீர்கள்.

நான் ஏன் பெண்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். பெண்கள் என்னிடம் நெருங்கிப் பழகுவதில்லை என்ற ஆற்றாமையால் நான் இவ்வாறெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா? உங்கள் எண்ணம் சரிதான். ஆனால் புலம்பக்கூடிய அளவுக்கு நான் தெளிவடைந்து இருக்கிறேன் என்ற வெற்றியைக் கொண்டாடவே இதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?

ஆம்! வெற்றிதான். ஒரு வகையில் இதுவும் வெற்றிதான். நான் யாரையும் பழிவாங்கவில்லை. வதைக்கவில்லை. துன்புறுத்தவில்லை. எனினும் நான் வெற்றிதான் பெற்றிருக்கிறேன். என்னைப் பொருட்படுத்தாத பெண்களில் ஒருத்தியை நேற்று கடைத்தெருவில் பார்த்தேன். அலுவலகத்தில் பணியாற்றிய காலத்தில் மணமாவதற்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அழகாக இருந்தால். நான் என் அலுவலகத்தை விட்டு நீங்க வேண்டிய சூழல் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவளுக்கு மணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. வருங்காலக் கணவன் அப்போதே லட்சங்களில் சம்பாதிக்கிறவனாக இருந்தான். எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. அவனது சம்பாத்தியம் அவளது உடல் மதர்ப்பில் நான்றாகவே தெரிந்தது.

எனக்கு இதுவும் புரிவதில்லை. நான் குறிப்பிடும் அந்தப்பெண் ஒரு முட்டாள். பிள்ளை பெற வைப்பதைத் தவிர அவளை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் அவள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. அப்படியெனில் அவள் வாழ்க்கை நன்றாக அமைந்ததற்கு எது காரணம். செழிப்பான முலைகளும் தொடைகளும் தானே. அவை இருந்தால் அந்த செழிப்பான முலைகளையும் தொடைகளையும் லட்சியமாக கொண்டு செயல்படும் அல்லது செயல்பட வைக்கப்படும் ஒரு ஆண் அவளுக்கு கிடைத்து விடுவான். இறுதிவரை தன்னுடைய முலைகளின் தொடைகளின் செழிப்பை பேணிக்கொண்டு அவனுடன் படுத்துருள்வதை மட்டும் செய்து கொண்டிருந்தால் அவள் வாழ்க்கை எந்த இடையூறும் இல்லாமல் நடைபெறும் அல்லவா. ஆகவே  ஆணின் உட்சபட்ச இலக்கு  செழிப்பான முலைகளும் தொடைகளும் உடைய பெண். பெண்ணின் உட்சபட்ச இலக்கு செழிப்பை இறுதிவரை போற்றி தன்னை நக்கிக்கொண்டே இருக்கும் ஆண்.

இவ்வளவு நேரடியாக நான் பேசுவது உங்களுக்கு எரிச்சலை அருவருப்பை அல்லது என் மீது பரிதாபத்தை வரவழைக்கலாம். ஆனால் நான் கேட்பதில் இருக்கும் நியாயம் மட்டும் உங்களுக்கு விளங்காது.

நேற்று நான் பார்த்ததாக சொன்னேன் அல்லவா அந்தப்பெண் என்னைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் பார்க்காதது போல கடந்திருப்பாள். இன்று இவ்வளவு சாதாரணமாக நான் இதைச் சொல்லி விடுகிறேன். ஆனால் அன்று இது எவ்வளவு பெரிய வதையாக எனக்கிருந்தது. என்னை பெண்கள் பொருட்படுத்துவதில்லை என்ற எண்ணம் ஒரு உறுப்பாகவே என்னில் எப்போதும் நீடித்தது. தொடர்ந்து ஏதோ பந்தயத்தில் இருப்பதைப் போன்ற ஒவ்வொரு நாளும் ஏதோவொன்று நடந்துவிடப் போகிறது என்ற எண்ணம் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

நான் எதிர்பார்க்காத உண்மையில் என்னை விடுவித்திருக்க வாய்ப்பிருக்கக்கூடிய ஒன்று நிகழத் தொடங்கியது. நான் மேலும் உறுதியாக சிக்கத் தொடங்கியது அப்போதுதான்.

7

இப்படிச் சொல்லித் தொடங்கலாம். தனக்கு பிடித்த ஆணுடன் உறவில் நீடிக்க பெண் என்ன செய்கிறாள்? அவனது கோபத்தை தன்னிரக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறாள். நீங்கள் இதை தாய் மகன் உறவிலேயே பார்க்க முடியும். தனக்கு நேர்ந்த ஒரு அவமானம் அல்லது அதிர்ச்சியை தாங்கிக் கொண்டிருக்கும் மகன் அம்மா அதன் காரணத்தைக் கேட்டதும் உடைந்து அழத் தொடங்கிவிடுவான்.

இந்த தன்மையை ஆணிடம் நீடிக்கச் செய்வதில் தான் அவனைத் தக்கவைத்துக் கொள்வதன் வெற்றி இருக்கிறது. பெரும்பாலும் ஆணைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவனைப் பெரிதாகப் பொருட்படுத்துவதாக பெண் கற்பனை செய்கிறாள். மறைமுகமாக உலகிலேயே சிறந்த மனிதன் அவன் தான் என அவனிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அவனது உண்மையான தகுதி வெளிப்பட்டு அவன் தலைகுனிய நேர்கையில் தடவிக் கொடுப்பதற்கு தவறாமல் வந்து விடுகிறாள். பெண்ணிடம் ஆறுதலை தேறுதலை எதிர்பார்க்கும் ஆண்கள் சுயமற்றவர்களாக இருப்பார்கள். அதன் காரணமாகவே புதியவற்றின் எதிர்கொள்ள முடியாதவற்றின் மீது விலக்கமும் அச்சமும் கொண்டிருப்பார்கள்.

பெண்ணின் மிக ஆபத்தான குணம் இந்த "தடவிக் கொடுத்தல்" தான். பெரும்பாலும் தாய் மகனுக்கு இந்த தடவிக் கொடுத்தலை செய்வதில்லை. ஆனால் கற்பனையில் மிதக்கும் பெண் இதை மீண்டும் மீண்டும் செய்கிறாள். அவனை அவன் உயர்ந்தவனாக சரியானவனாக தன்னுடைய நல்லுணர்ச்சிகளால் துன்புறுகிறவனாக எண்ணிக் கொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் எடுத்துக் காட்டுகிறாள். ஆணை வீழ்த்தும் மிக முக்கியமான கண்ணி பெண்ணின் இந்த குணம் தான்.

இக்குணத்திற்கு ஒரு காரணமும் உண்டு. பெண்களால் நீண்ட கால செயல்பாடுகளை முழுமையை கற்பனை செய்ய முடியாது. பெண் எப்போதும் ஒரு தருணத்தின் சிக்கலில் இருந்து தப்பிப்பதற்கென்று தெளிவாக காய்களை நகர்த்துகிறவள். அதனால் தான் பெண்களால் எல்லா விதிகளும் சரியாக வரையறுக்கப்பட்ட களங்களில் நன்றாக செயல்பட முடிகிறது. நிச்சயமின்மை வந்து முகத்தில் அறைகையில் பெண் அஞ்சிப் பின்னடைவாள். நிச்சயமின்மையை நோக்கிச் செல்லும் ஆணையும் அவள் வெறுப்பாள்.

துயரை செறித்து மேல் செல்ல முடிந்த ஆண் காமத்தைத் தாண்டி உணர்வுத் தேவைக்கென பெண்ணை அண்டுவது கிடையாது. இந்த செறித்தலே பெண்ணை பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது. அதை நிகழவிடக்கூடாது என்பதே அவளுக்கு இடப்பட்ட கட்டளை. ஆணின் முழுமையையும் முழுமையை விரும்பும் ஆணையும் பெண் வெறுக்கிறாள். அதனால் தான் ஒரு ஆணை வசத்தில் வைத்திருக்க அவனைப் பற்றி மற்றவர்கள் கேட்கக்கூசும் புகழுரைகளை அவனிடம்  சொல்வாள்.

இந்தத் தடவிக்கொடுத்தல் தினம் தினம் நடந்து கொண்ட இருந்தது. அவர்கள் தடவத் தடவ நான் விலகிக் கொண்டே சென்றேன்.

இதை உங்களால் எந்த அளவிற்கு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. பெண்கள் தனியாக ஒரு ஆணை வெறுப்பதில்லை. கூட்டாகவே வெறுக்கின்றனர். அந்த வெறுப்பை மிக எளிதாக அவர்களை மனதளவில் நக்கும் ஆண்களிடம் அவர்களால் கடத்திவிட முடியும். ஒருவன் கீழானவன் என அனைவரும் சேர்ந்து நம்பத் தொடங்கும் போது அவன் தன்னை கீழானவனாக உணரத் தொடங்குகிறான். தன்னுடைய செயல்கள் சரிதானா என்ற ஒவ்வொருமுறையும் இருமுறை சரிபார்த்துக் கொள்கிறேன். அவனை கீழானவன் என்று நிறுவுவதற்கான சாட்சியங்களை அவனது சூழல் தேடிக்கொண்டே இருக்கிறது.

ஒரு சொல் ஒரு தவறான அசைவு ஒரு முறை மீறிய செயல் போதும் சூழலின் உள் ஒளிந்திருக்கும் வன்முறை அவனைத் துடிக்கத் துடிக்க வதைத்துக் கொல்ல. நான் அப்படிப்பட்டவனாக்கப்பட்டேன். ஒரு குழுவில் சிரித்துப் பேசிக் கொண்டிருபபவர்கள் நான் நெருங்கிச் செல்லும் போது அமைதியடைந்தனர். எனக்கு சற்று நெருக்கமான ஆண் நண்பர்கள் கூட என்னிடம் ரகசியம் பேணத் தொடங்கினர். நான் மேலும் மேலும் நாகரிகமானவனாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நான் சிரிப்பது அத்துமீறல் எனக் கருதப்பட்டது. குனிந்தபடியே அலுவலகத்தில் நுழைந்து எல்லோருக்கும் பணிந்தபடியே நடந்து கொண்டு புறப்பட்டுச் செல்வதே அன்றாடமென இயல்பென வகுக்கப்பட்டது.

நான் சொல்ல வந்தது இதுவல்ல. என்னிடம் எல்லோருமே சகஜமாக நடந்து கொள்வது போலத்தான் தோற்றமளிக்கும். ஆனால் என்னுடன் யாரும் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை என்பதை அந்த சூழலை தொடர்ந்து கவனிக்கும் ஒருவரால் தான் உணர முடியும். தினமும் மனம் கனன்றபடியே அலுவலகம் சென்று மீண்டு வந்து உறங்கிக் கொண்டிருந்தேன். எந்த நிலையிலும் சூழலிலும் இருப்பதிலேயே மோசமானதையே கற்பனை செய்தேன். அதுவே எனக்கு நடந்தது.

துயர் கொண்டிருப்பவர்களை என்னைப் போல பொருட்படுத்தப்படாமல் திரிகிறவர்களை மீள மீள நோக்கினேன். அது ஒரு இருள்வெளி. அங்கு கண்ணீரும் புன்னகையும் கிடையாது. அங்கு எல்லாமே சந்தேகிக்கப்படும். தன்னிரக்கம் இல்லாதவனாக மேம்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துகிறவனாக ஒரு நிமிடம் கூட அத்தையவர்களிடம் இருக்க முடியாது. நான் சீக்கிரமாகவே விலகிவிட்டேன்.

என்னை விலக்கி வைத்திருப்பவர்கள் மிக மிக மகிழ்ச்சியுடன் உயிர்ப்புடன் இருப்பதாக எண்ணிக் கொள்வதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. குறைந்தபட்சம் என் முன்னே அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டனர்.

ஒரு எல்லையில் திடீரென அனைத்தும் சகஜமடைந்தது. அதாவது புது உறவுகள் தரக்கூடிய இனிப்பும் புளிப்பும் தீர்ந்து போய் அவர்கள் அனைவரும் சகஜமடைந்துவிட்டனர். முன்பு போல அவர்கள் செயல்கள் என்னை சீண்டவில்லை. புண்படுத்தவில்லை. என்னுடன் இயல்பாக உரையாடக்கூட தொடங்கினர். ஆனால் என்னால் இதைத்தான் முழுதாக ஏற்க முடியாமல் போனது. பெண்களுக்கும் அவர்களை ஒட்டிக்கொள்ள வைத்து என்னை விலக்க வைத்த அவனுக்கும் அவர்களுடன் நட்பு பாராட்டிய மற்றவர்களுக்கும் நானும் என் நிலையும் இயல்பானது என்றாயிற்று. என் முன்னே இருந்த சில விரிசல்கள் தப்பிச் செல்வதற்கான மிக மெல்லிய வழிகளைக்கூட அவர்களின் சகஜத்தன்மை உடைத்துப் போட்டது. நான் முழு முற்றாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தேன்.

என்னால் அத்தோல்வியை ஏற்க முடியவில்லை. அப்பெண்களின் முகத்தை மனதில் நிறுத்தி சுய மைதுனம் செய்ய முயன்றேன். நடிகைகளின் அங்கங்களும் முக பாவனைகளும் நினைவுக்கு வந்தனவே தவிர அப்பெண்களை என்னால் நினைவுமீட்ட முடியவில்லை.

நெஞ்சில் கால் வைத்து யாரோ எப்போதும் என் மேலேறி நிற்பதைப் போன்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. நான் படியத் தொடங்கினேன். அழ முயன்றேன். முடியவேயில்லை. என்னை ஓங்கி அறைந்து கொண்டேன். வெறிபிடித்தவன் போல வாசித்தேன். எழுதினேன். நண்பர்களுடன் மணிக்கணக்கில் உரையாடினேன். யார் என்ன உதவி கேட்டாலும் தட்டாமல் செய்தேன். அலுவலகத்தில் கடுமையாக உழைத்தேன். அந்த நெருப்பு ஆழ்த்தில் கனன்றபடியே இருந்ததே. அதன் பரப்பு சுருங்கச் சுருங்க அதன் அடர்த்தி கூடியது.

8

சிந்துவை முதன்முறை பார்த்தபோது அச்சம் தான் எழுந்தது. மிக அழகான பெண்கள் கூர்மையானவர்களாக இருக்கும் போது தோன்றக்கூடிய அச்சம் அது. சிந்துவின் உதடுகள் மிகச்சிறியவை. அவ்வளவு சிறிய உதடுகள் முத்தமிடுவதற்கு ஏற்றவை கிடையாது. முத்தத்தின் போது முழுமையாக முத்தமிடுகிறவனின் உதடுகளில் இத்தகைய உதடுகள் அடங்கி விடும். சீறி எழுந்து பெரிய உதடுகளை கவ்வும் வெறி அத்தகைய பெண்களுக்கு இருந்தாலன்றி அவ்வுதடுகளை தாங்கிக் கொள்ள முடியாது.

சிந்து இரக்கமற்றவள். எங்கள் அலுவலகத்தில் பணியாணையை நீட்டியபடி அவள் வந்து சேர்ந்த போது எங்களைப் போன்ற ஒரு வேலை என்றே நினைத்தோம். ஆனால் அவன் எங்களனைவருக்கும் மேலாளர் என்பது ஏற்கனவே எங்கள் அலுவலகத்தில் உருவாகி இருந்த "குடும்ப அமைப்பை" அதிர்ச்சி கொள்ளச் செய்தது.

குடும்பத் தலைவன் தன் வழக்கமான உத்திகளுடன் சிந்துவை நெருங்கினான். அவள் கண்ணாடி அறையில் அவன் முகம் மட்டுமே பலகீனமாக சிரித்துக் கொண்டிருந்தது. சிந்து முகம் கொஞ்சமும் சமநிலையை இழக்கவில்லை. அவனை அவள் அமரக்கூடச் சொல்லவில்லை. ரொம்ப நாளுக்குப் பிறகு நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.

சிந்துவுடன் பேசும் போது அவள் உதடுகளன்றி வேறெந்த நினைவும் எனக்கு இருந்ததில்லை. அவள் மாந்தளிர் நிறம். சுடிதார் புடவை இரண்டு உடைகளைத் தாண்டி அவள் வேறெந்த மாதிரியும் உடையணிவதில்லை. கூந்தலை ஒரு முறை கூட அவிழ்த்துவிட்டுக் கொண்டு அலுவலகம் வந்ததில்லை. சொந்த வேலைகளை எந்த கீழ்நிலை பணியாளர்களிடமும் ஏவியதில்லை. அலுவலகத்தில் தேவை இருந்தாலொழிய தாமதித்தது இல்லை. கண்களன்றி வேறு எவ்வுறுப்பையும் பார்த்து பேசுவதில்லை. தன்னை ஒரு துளி கூட வழியவிடக்கூடாது என்ற அவளது தீர்மானத்திற்கென அவளை ஆயிரம் முறை முத்தினேன். அவள் பெயர் கடந்து அவளைப் பற்றிய ஒன்றுமே யாருக்கும் தெரியாது என்பதற்கென அவளை அள்ளித்தூக்கி கொஞ்சினேன்.

எல்லோரிடமும் இயல்பாக நடந்து கொண்டாள். கண்களும் உடனிணைய சிரித்தாள். கருணையேயின்றி தண்டித்தாள்.

அவளுக்கு உடனடி உதவியாளனாக நான் நியமிக்கப்பட்டேன். தற்செயல் என்றுதான் நான் எண்ணிருந்தேன். ஆனால் சிந்து அவளாகவே என்னிடம் சொன்னாள்  அவளை என்னை அவ்விடத்திற்கு நியமிக்கச் சொன்னதாக. யாரிடமும் ஒரு வார்த்தை அதிகம் பேசிடாத என் சிந்து யார் குறித்தும் அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளாத என் சிந்து என்னை தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஏன் என்று கேட்க நினைத்து கட்டுப்படுத்திக் கொண்டேன்.

எல்லோருக்கும் அவள் உதிர்க்கும் சிரிப்பிலிருந்து எனக்கான சிரிப்பு வேறுபடுவதை உணர்ந்தேன். நான் உணவருந்திவிட்டேனா என்று கேட்டுவிட்டு நீ என்னிடம் அதையெல்லாம் கேட்கமாட்டாய் என்று சிந்து கேட்ட அவ்விரவு என்னையும் மீறி உடல் குமுறி அழுகை வந்தது. தலையணையை அவளென உருவகித்து அழுத்தமாக கட்டிக்கொண்டேன்.

இவ்வளவுக்கும் பிறகு என் மனதின் மற்றொரு பகுதி சிந்துவை உடலென்றே நினைவில் வைத்திருந்தது. அவள் என்னிடம் மட்டுமே பிரியமாக இருக்க வேண்டும் என என் ஆழம் விரும்பியது. அவள் புடவை அணிந்து வரும் நாட்களில் ஆயிரம் முறை கட்டுப்படுத்திய பிறகு அவள் முலைகளின் வடிவமறிய விழிகள் திரும்பின. காற்றில் வியர்வை மணத்தில் அவள் உடல் மணமும் கலந்திருந்தது. அவள் என்னை வேண்டுமென்றே சீண்டுவதாக கற்பனை செய்தேன்.

அவளை விரும்பவதை எத்தனையோ வார்த்தைகளில் மனதில் அவளிடம் சொல்லிப் பார்த்தேன். நேரில் சொல்ல எண்ணியபோது அது இயல்பானதாகத் தோன்றியது. அவள் நான் சொல்வதற்கென்றே காத்திருக்கிறாள் என்று ஆழமாக நம்பினேன். வேலைகளை முடித்துக் கொண்டு அன்று புறப்பட எட்டு மணியானது. நானும் வெளிக்கிளம்பி என் அறைக்கு செல்வதெற்கென பேருந்திலும் ஏறிவிட்டேன். சட்டென ஒரு அதிர்ச்சியுணர்வு தாக்க அலுவலகம் நோக்கி ஓடிவந்தேன். சிந்து அறையில் தான் இருந்தாள் எனக்கென்றே காத்திருப்பது போல.

நான் அவளை காதலிப்பதைச் சொன்னேன். மிக மெல்லிய ஒரு ஏளனம் அவள் விழியில் கடந்து சென்றது சாலையை இருட்டில் கடக்கும் பாம்பு போல. உதிர்ந்து விழுந்து விடுவேனோ என்று தோன்றியது எனக்கு. நான் ஏற்பினைத் தவிர வேறெதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் வெளியே நிறுத்தப்பட்ட சிறுவன் என திருப்பி அனுப்பப்பட்ட எல்லா சம்பவங்களும் என் நினைவில் எழுந்தன. அந்த அறை அப்படியே பெரிய குழியாக மாறி என்னை மூடிவிடாதா என்று துடித்தேன். என் உடல் கைகளுடன் கால்களுடன் ஆரோக்கியத்துடன் அத்தனை பெரிதாக இருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அது அப்படியே சுருங்கி எடைமிகுந்த ஒரு எண்ணமாக நான் மாறிவிட மாட்டேனா என்று நடுங்கினேன்.

எல்லா பெண்களும் பெய்த அதே நஞ்சினை பெய்த பிறகும் அவர்களைப் போலவே சிந்தும் படம்தூக்கி நின்று கொண்டிருந்தாள். அவளது முழுமையான உடலுடன் என் முன்னே நின்று கொண்டிருந்தாள். மென்மையான கைகள். ஒரு பிடி சதை அதிகமற்ற உடல். அள்ளி முகரத்தூண்டும் கூந்தல். இழுத்து அணைக்கச் சொல்லும் விழிகள். உறுதி சற்றும் குறையாத கச்சலான உடலில் அமைந்த முலைகள். இறுகி வலுத்த தொடைகள். இவை அத்தனையும் வந்து உதடெனும் புள்ளியில் இணைந்தன. மெல்லிய வெளிச்சமே இருந்தாலும் அவ்வறையில் அவள் வெறி மின்னும் உள்ளுதட்டுச் சிவப்பு தெரியும் உதட்டினை என்னால் காண முடிந்தது. பிளக்கப்பட்ட ஆழமான புண் போன்றிருந்தன அவ்வுதடுகள்.

அதன்பிறகு நான் யோசிக்கவில்லை. அல்லது அனைத்து சாத்தியங்களையும் முன்னரே யோசித்துவிட்டேன். கண்ணாடி அறையின் திரைச்சீலைகளை இழுத்துவிட்டு அழுத்தமான கண்ணாடியால் மூடப்பட்டிருந்த மேசையின் மீதிருந்த ஒரு சில பொருட்களை கீழே தள்ளினேன். அவள் அதிரவில்லை. ஆனால் அவள் உதடுகள் துடித்தன. எம்பிப் பறந்து மீன்கொத்திக்கு தன்னை காட்டும் மீனென அவ்வுதடுகள் துடித்தன. ரத்தம் குடிக்கும் வெறியுடன் சென்று அவளின் சிறிய உதடுகளை கவ்விவேன். நான் வெல்வதை விழையாதவளாக இருமடங்கு விசையுடன் என் உதடுகளை கவ்வினாள். முழுமையாக அவளை நிர்வாணமாக்கி மேசை மீது கிடத்தினேன்.

உடலில் மெல்லிய நடுக்கம் கடந்து செல்ல என் மேல் சட்டையை கழற்றிபடியே அவள் வலத்தொடையில் முத்தமிட்டேன். அது அவளுக்கு என்னை காட்டிக் கொடுத்திருக்கவேண்டும். முழுப்பாதமும் முகத்தில் பதிய என்னை உதைத்து தள்ளினாள். நான் மீள்வதற்குள் அவள் எழுந்துவிட்டாள். ஏமாற்றமும் எரிச்சலும் நிறைந்த முகத்துடன் அறையை விட்டு சிந்து வெளியேறினாள்.

வன்புணர்வுக்கு முயன்றதாக என் மீது பதியப்பட்ட வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை எனக்கு கிடைத்தது.