Monday 4 May 2020

ஒளிர்நிழல் குறித்து அ.க.அரவிந்தன்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு,

நாவல் வாசித்த பின்னர் 'ஒளிர்நிழல்' பற்றிய பிறர் கருத்துக்களை பார்த்தேன் .அதில் ரஞ்சனி பாசு அவர்கள் எழுதிய கருத்துக்களும் என் அவதானிப்புகளும் சற்றே ஒத்திருந்தது.அதனால் அதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு சில கருத்துகளை எழுத விழைகிறேன்.

புயலிலே ஒரு தோணியில் ஆவன்னா என்ற ஒரு அத்தியாயமுண்டு.அதில் அந்த கதாபாத்திரம் ஒரு பெருங்கதையை சொல்லும்.எழுச்சி பெற்று வீழ்ச்சி அடைந்த ஒரு கதை அது.அதுதான் நாவலின் அடிநாதமென எனக்கு தோன்றும்.அதுதான் நாவலிலே நீண்ட அத்தியாயம் என்றும் நினைக்கிறேன்.

ஒளிர்நிழல் படித்தபோது அந்த நினைவு எட்டிப்பார்த்தது.ஆனால் இங்கு வீழ்ச்சியை மட்டும் அல்லது வீழ்ச்சிக்கு பின்னர் என்று நான் வரையறுத்துக்கொள்கிறேன். காத்தவராயன்,ராஜகோபால தேவர் சித்திரத்தை வைத்து இதை செய்கிறேன்.
எஞ்சும் சொற்கள் முன்னுரை என்று நினைக்கிறேன். நீங்கள் கதை சொல்லும் யுத்திக்கு முக்கியத்துவம் தருபவன் அல்ல என்று சொன்னீர்கள்.நாவலை படிக்கும் எவருமே அதை ஆமோதிக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

ஒரு பெரிய வேலியமைத்து அதனுள்ளே நீங்கள்  மாட்டி, பின்னர் வெகுலாவகமாகவும் அறிவுப்பூர்வமாகவும் தவ்வி வந்ததுபோல தோன்றியது.நம் தமிழ்சினிமா போல நம் இலக்கியமும் இருந்துருந்தால் அல்லது பல கோடி மக்களால் இதை அணுகமுடிந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப்பார்தேன்.நிச்சயமாக நாவலில் பேசப்பட்ட இரு இனங்களினாலும் நீங்கள் தாக்கப்பட்டிருப்பீர்கள் என்றே தோன்றியது.தவறாக உள்வாங்க அனைத்து சாத்தியமும் உண்டு என்று தோன்றியது.

'அவரவர் சரி அவரவருக்கு' என்ற தங்களின் வரியை எவரும் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.(அவ்வாறு நிகழ்ந்திருந்தால்).

நான் தங்களின் சிறுகதை வழி நாவலை அடைந்தாலும் சில அதிர்ச்சி இருந்தது தான்.ஒவ்வொரு அத்தியாயமும் முடியும்போதும் சற்றே 'பக்' என்றுதான் இருக்கிறது. தங்களின் சிறுகதையை விட ஒருபடிமேலாக.





முதலில் நாவல் வாசித்த பின்னர் ஒன்றுமே நிற்கவில்லை.தங்களின் கதை சொல்லும் முறையும்,மொழியும் தான் காரணம் என்று நினைக்கிறேன். விளைவாக மீண்டும் முக்கிய பகுதியென நான் எண்ணுவதை வாசித்தேன். ஒரு டார்சை வைத்து ஒரு சித்திரத்தில் மீது விட்டு விட்டு அடித்துக்காட்டுவதுபோல ஒரு உணர்வு. சிறுக சிறுக மண் சேர்த்து அதை மலையென குவித்து தானே தின்று செத்துபோனார் என்று முருகையன் கதாபாத்திரத்தை முடிக்கிறீர்கள்.
இது ஒரு பெரிய கனவு சிதைந்து வீழ்வதை காட்டியது.குணாவும் குரூப் 2 என்று சொல்லி பி.சி வரை செல்கிறான்.அது அனைத்துமே தங்களின் கதை சொல்லும் யுத்தியால் முதலில் கடந்துபோய்விட்டேன்.கதை சொல்லும் முறையின் வெற்றி அல்லது உச்சம் என்று நான் எண்ணுவது அனைத்து கதாபாத்திரமும் யார்,யாருக்கு,என்ன சொந்தம் என்று கண்டைவது முழுக்க முழுக்க வாசகனின் முயற்சியால் மட்டுமே அதனால் நாவலின் மீது எனக்கு ஈர்ப்பே உண்டாயிற்று.

குடும்பம் சார்ந்த சிக்கல் என்று என்னால் வரையறை செய்யமுடியவில்லை தங்களின் சிறுகதையைபோல. மாறாக ஆண் பெண் உறவு சிக்கலே அதிகம் வருவதாகப்பட்டது.சக்தி எழுதிய எதிர்சாத்தியதை வைத்து மதிப்பீட கூடாது என்று படுகிறது.ஒருவேளை அருணாவுக்கு சுந்தராலோ,சந்திரசேகரலோ சில கசப்பை அவள் எதிர்கொண்டால் அது குடும்ப சிக்கல் சார்ந்தது என்று வரையறை செய்திருப்பேன் என்று நினைக்கிக்றேன். அதே போல் தான் அனைத்து கதாபாத்திரத்திற்கும் என்று நினைக்கிறேன்.

அம்சவள்ளி முருகையனிடம் சபலம் கொள்வது மிக துல்லியமாக வந்து செல்கிறது.(அது சக்தி அருணா மீது கொள்ளும் சபலத்தை புரிந்துகொள்ள என்றும் நினைக்கின்றேன்)அதுபோல சக்தி தன் வருங்காலத்திற்கு அருணாவால் பாதிப்பு வரலாம் என்று எண்ணுகிறான் மற்றும் உரையை நிகழ்த்திய பின்னர் காருக்குள் சென்று சிரிப்பது.இது எல்லாமே சட்டென்று ஒரு துளி விஷமாக பட்டது.  நாவலின் நடுநடுவே வரும் சில விமர்சன கருத்துக்கள் எனக்கு மிகவும் பகடியாக பட்டது.அவ்வாறு சொல்ல சொல்ல வேறு சாத்தியம் என்ன என்று தான் யோசனை செய்ய வைக்கிறது.ஒருவர் ஒரு கருத்து சொல்லும் போது இயல்பாக மணம் வேறு எதிர் கருத்தை தேடுவதை போல அது நிகழ்ந்தது.கவிதையும் ,உரையும் , எதிர்சாத்தியமும் உச்சங்கள்.கீழறக்க முடியாத ஒரு ஆர்வம் நாவலின் மீது வருவதற்கு  அது முக்கிய காரணமாகிறது கதை சொல்லும் முறையுடன்.நானும் கிராமத்தான் என்பதால் கிராம இளைஞர்கள் சாதி கட்சியின்  பலி கேட்கும் கூர்வாளை நீட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை பார்க்கிறேன்.மிக்க சரியென்று ஆமோதித்தேன்.அனைத்து கதாபாத்திரத்திலும் ஒரு க்ரெய் டச் வைப்பது தங்களின் ஸ்டைலோ என்று நினைக்கிக்றேன்.அதனால் தான் என்னவோ ஒரு பெரிய அன்போ கருனையோ பாத்திரம் கோரவில்லை.

குறையென்று சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை என்றாலும் ஒரு சில என் உணர்வுகளை மட்டும் பகிர்கிறேன்.

நாவலில் கதைசொல்லும் முறை அதிவேகமாக இருந்தது அல்லவா அதனால் கதாபாத்திரம் எளிதில் மனதில் நிற்கவில்லை.(மீள்வாசிப்புக்கு காரணம் அதுவே).

உரையாடல் அதிகம் இல்லாததால் கதாபாத்திரத்திம் சற்றே தள்ளிதான் நிற்கிறது(இதை நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள் என்று நினைக்கிக்றேன்).நாவல் பலரில் வாழ்க்கையை திட்டவட்டமாக கண்முன் காண செய்ய முயற்சிக்கிறது அதனால் இது அவசியமென்றே தோன்றுகிறது. கவிதையும் ,உரையும் ஒரு உரையாடலாக மாறி நெஞ்சில் நிற்கிறது. அதனால்தான் கவிதையை உரையாடலாய் மாற்றும் சக்திக்கு பெரும்பங்கு இருப்பதாக படுகிறது.கதாபாத்திரம் ஒன்றொடு மற்றொன்று உரையாடல் நிகழ்ந்தும் போது ஒரு புதிய வாசிப்பை நாவலில் நிகழ சாத்தியமிருந்திருக்கும்  என்று படுகிறது.(அதை தவிர்பது தான் உங்களின் யுத்தியாக இருக்காலம் )

சக்தியோ,ரகுவோ,கதைசொல்லியோ தங்களின் திறமையால் வாசகனை கட்டுகிறார்கள். அதனால் வாசகனுக்கு ஆமோதிக்கவே தோன்றுகிறது என்று நினைக்கின்றேன்.ஒருவேளை ஒரு கதாபாத்திரம் மீது இணக்கம் ஏற்பட்டு அதன் வழி முரண் வந்திருந்தால்.நான் செல்லும் தூரம் அதிகரித்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஒரு உரையில் நீங்கள் சொன்னீர்கள் 'சிறுகதை என்பது ஒருவகையாக விளையாட்டு போல தான் ஆனால் நாவல் அவ்வாறு அல்ல என்று'ஆனால் அந்த விளையாட்டை இங்கும் சற்று நிகழ்த்தியதாக பட்டது.

தவறான நம்பிக்கையின் மீது எழும் தற்பெருமை உண்மையைச் சந்திக்க நேரிடின் தன்னியள்பாக மாறிவிடும்.

                                                     -பா.சிங்காரம்
அவரவர் சரி அவரவருக்கு
                                                    -சு.பி

இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும்  இடையே காலத்தின் வளர்ச்சியை இங்கு நினைவுகூற தோன்றியது.முற்றிலும் நேர் எதிர் கருத்துக்கள் நிறைந்து,மாற்று விளிம்பியங்களும், கதைசொல்லும் முறையும் ,வேறு  வேறு குறல்களும் ,யுத்திகளும் 
காலத்தால் பெற்றெடுக்கப்பட்டதை இங்கு நன்கு உணர்கிறேன்.
(அதனால் தங்களின் கதை சொல்லும் முறையை நான் குற்றம் சொல்லவில்லை)

என்னை கட்டிக்கொண்டு வரிகளில் ஒன்று:

மன்னிக்கமுடியாதவற்றை மறப்பதற்கு ஒரே வழி அதை அப்படியே திரும்பச்செய்வது தான்.
                                              -சு.பி

அ.க .அரவிந்தன்.

No comments:

Post a Comment