Wednesday 23 March 2022

சுகஜீவனம் - குறுங்கதை



இன்னும் நாற்பத்தைந்து வயதுகூட ஆகவில்லை தான் அடிபட்டிருப்பதோ காலில்தான் பொதுப்படுக்கை இல்லாத புண்ணியத்தால் மருத்துவமனையில் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளும் தனி அறையில்தான் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும் இந்த நிலையில் அவர் உடலுறவுக்கு அழைப்பது கமலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி மட்டுந்தான். வெறுப்போ அருவருப்போ இல்லை. எப்படி இருக்கும்! பத்து நாட்களாக அடிவயிற்றில் கைபோட்டுத் தடவுகிறவரை தட்டிவிட்டுக் கொண்டுதானே இருந்தாள். காலையில் அந்த முகத்திலிருக்கும் முறைப்பு சிறு குழந்தையை ஞாபகப்படுத்தும். அந்த சமயத்தில் மனமிளகக்கூடச் செய்வாள். ஆனால் இரவில் அவருக்கு முன்னே பதினான்கு வயது மகனும் பன்னிரண்டு வயது மகளும் பக்கத்து அறையில் தூங்குவது நினைவுக்கு வந்துவிடும். ரோஷினி கூட புரிந்து கொண்டுவிடுவாள். ஆனால் பிரதாப்பை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. அவன் தன்னையும் அவரையும் அப்படி கற்பனை செய்வதைக்கூட அவளால் கற்பனை செய்ய இயலவில்லை. அவளுக்கு மட்டும் விருப்பமில்லையா என்ன! பிள்ளைகள் விடுமுறைக்கு சொந்தக்காரர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது ஐந்தாறு முறைகூட கூடியிருக்கிறார்கள். ஆனால் உடலில் அசதியையும் வலியையும் கடந்த உற்சாகம் கூடிவிட்டிருக்கும். நீலகண்டன் ஒரு வாரத்துக்கு சிரித்துக் கொண்டிருப்பார். கமலா சிடுசிடுக்கும்போது அந்த குழந்தை முறைப்புகூட முகத்திலிருக்காது. இந்த ஊரடங்கு காலத்தில் பிள்ளைகள் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்ததால் உடலுறவுக்கான வாய்ப்பு அருகிப்போனது. நீலகண்டனும் அடிக்கடி முறைத்துக் கொள்கிறார்.


முன்புபோல அலுவலகத்தில் இருந்து மதியம் சாப்பிட வரும்போது நிகழும் அவசரக்கூடல்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர் அலுவலகத்தில் இருந்து ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்துவிடலாம். ஆனால் அரைமணி நேரந்தான் மதிய இடைவேளை. 'வரேன்' என்ற செய்தியுடன் ஒரு முத்த எமோஜியை வாட்ஸ்அப்பில் அனுப்புவார். அதுதான் சமிக்ஞை! கமலாவுக்கு வேண்டும் போலிருந்தால் அவர் புறப்படுவதற்கு முன்னதாகவே 'வாங்க' என செய்தி அனுப்பி விடுவாள். அவர் புறப்படும்போதே கமலா ப்ளவுஸை தளர்த்தி தயாராகி விடுவாள். உள்ளே நுழைந்ததுமே கதவடைத்து உதட்டைக் கவ்வி இழுத்துச் சென்று விடுவாள். ஏற்கனவே தளர்வான உள்ளாடைகளை நீலகண்டன் எளிதாக அகற்றி விடுவார். கமலா நைட்டியை கழற்றுவதில்லை. ஆனால் நீலகண்டனுக்கு அவர் முழுக்க நிர்வாணமானால்தான் பிடிக்கும். கமலாவின் நைட்டியையும் முலைகளுக்கு மேல் வரை தூக்கிவிட்டால் போயிற்று! சில சமயங்களில் இருபது நிமிடங்கள் இயங்கியும் நீலகண்டன் தளரமாட்டார். அதுபோன்ற சமயங்களில் அவர் அலைபேசியில் அவருக்குப் பிடித்த சில நடிகைகளின் - தினம் ஒரு சிகரெட் குடிப்பதற்கான அனுமதி போல ஜூலியா ஆன், ரேஷ்மா, ஸ்வாதி நாயுடு என மூன்று நடிகைகளில் படங்களை மட்டும் பார்க்க கமலா அனுமதித்து இருக்கிறாள் - படங்களை கமலா ஓடவிடுவாள். கண்களைமூடி இயங்கித்தளரும் போது அவர் கற்பனையில் உதித்தது ஜுலியாவா,ரேஷ்மாவா,ஸ்வாதியா அல்லது தானே தானா என்று கமலாவுக்கு குழப்பமாக இருக்கும். சில சமயங்களில் இரவில் இரண்டு மூன்று முறை கூடிவிட்டு மதியத்தில் அரைமணி நேரம் இயங்கியும் கூட விந்து வெளிப்படாது. அதுபோன்ற சமயங்களில் ஆழமாகக் கமறி உள் தொண்டையில் இருந்து சளியை இழுத்து கமலாவின் குறியில் துப்புவார். ஒரு சில முறை விந்து வராமல் புறப்பட்டபோது இந்த உத்தியை கடைபிடிக்கச் சொல்லி அவரை அறிவுறித்தியது சாட்சாத் கமலாவேதான்! மதியம் அவர் வருவதற்கு முன்பே கமலா பாதாமும் குங்கமப்பூவும் கலந்த பாலை கொதிக்க வைத்து எடுத்து வைத்துவிடுவாள். மற்ற நாட்களிலானால் மதிய உணவுக்குப்பிறகு அதை பருகக் கொடுப்பாள். உடலுறவு கொள்ளும் நாட்களில் அதுதான் உணவே! இயங்கித்தளர்ந்து கிடப்பவரை சற்றுநேரம் அணைத்திருந்துவிட்டு எழுந்து சென்று தொடைகளில் விந்து வழியாமல் டிஷ்யூவால் துடைத்துக் கொண்டு கைகளைக் கழுவி பாலினை எடுத்துவந்து அவரை மடியில் சாய்த்துக் கொண்டு ஊட்டுவாள். கடைசி வாய்ப் பாலை மட்டும் அவள் உறிஞ்சி அவர் வாய்க்குள் துப்புவாள். அந்த எச்சில் பாலுக்காகத்தானே நீலகண்டன் அவருக்குப் பிடிக்காத பசும்பாலைக் குடிக்கிறார்! மூன்று மணி வரையிலும் கமலா குளிக்கமாட்டாள். தொடைகளில் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்பான விந்து மொடமொடப்பாக மாறும்வரை அதைக்காய விடுவாள். நீலகண்டன் மாலையில் நண்பர்களுடன் டீ குடிக்கச் செல்லும்போது ஒரு வடைக்கு பதிலாக இரண்டோ மூன்றோ  சாப்பிட்டார் என்றால் அவர் வீட்டில் சாப்பிடவில்லை என்று கண்டறிந்துவிடும் நண்பர் ஒருவர் அவருக்கிருந்தார்! சாப்பிடாமல் போகும் நாட்கள் வாரத்துக்கு மூன்றைத்தாண்டவே கமலா அதிகபட்சம் வாரம் இரண்டு முறைதான் என்று கட்டளையிட்டால். கட்டளையை அடிக்கடி அவளே மீறவும் செய்வாள். வேலியை மேயும் பயிர்!


இந்த சந்தோஷங்களையெல்லாம் இந்த ஊரடங்கு கெடுத்துவிட்டது. இவர் தடவுவதால் ஏறும் உடல் உஷ்ணம் வேறு தலைவலியாகத் தங்கி விடுகிறது. கமலாவின் தனிமைப்பொழுதுகளும் எந்நேரமும் வீட்டிலிருக்கும் கணவனாலும் பிள்ளைகளாலும் திருடப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் குறிக்க வரும் பாலச்சந்திரனையும் நிம்மதியாக ரசிக்க முடிவதில்லை! நீலகண்டனும் சற்று மாறித்தான் போயிருக்கிறார். இந்த விரும்பத்தகாத மாற்றம் தந்த குழப்பத்தில்தானே வண்டியில் இருந்து விழுந்து ஆஸ்பத்திரியில் கிடக்கிறார்! ஆகவே அதற்கு தானும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்வு அழுத்தவே கமலா ஒத்துக்கொண்டாள்.


ஆனால் ஒத்துக்கொண்ட பிறகே நடைமுறை சிக்கல்கள் உரைத்தன. நீலகண்டன் கீழும் அவள் மேலுமாக இருந்தாக வேண்டும். அந்த நிலையில் அவர்கள் இணைந்ததில்லை. 'ட'வை திருப்பிப் போட்டது போல கமலாவை வளைத்து கட்டிலில் கையூன்றச் சொல்லி பின்னிருந்து இயங்கி இருக்கிறார். அவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு  கமலா மேலே உட்கார்ந்தும் இயங்கி இருக்கிறாள். ஆனால் அவர் படுத்திருக்க கமலா மேலேறி அமர்ந்ததில்லை. வேறு வழியில்லை! எப்படியாவது அவரை சூடேற்றி கொஞ்ச நேரத்தில் விந்து வெளிப்பட வைத்து தளர்த்திவிட வேண்டும் என்று மட்டும் நினைத்தாள். திடீர் யோசனையாக படங்களில் பார்த்தது போல 'நான் வேணும்னா வாயில பண்ணவா' என்று கேட்ட கமலாவை நீலகண்டன் வலி தெரியும் முகத்துடன் பார்த்தார். கமலாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன.


அன்று புடவை கட்டி வந்திருந்தாள். நல்லவேளையாக சுடிதார் போடவில்லை என்று தோன்றிய ஆசுவாசம் உடனே மறைந்தது. புடவை என்றால் புடவையையும் ஜட்டியையும் மட்டும் கழட்டிவிட்டு அவர்மீது ஏறிப்படுத்துவிட்டு எழுந்து கொள்ளலாம். ஆனால் நீலகண்டனுக்கு அவள் முலைகள் வேண்டும். மணமான புதிதில்கூட அதன்மீது இவ்வளவு பித்தில்லை. மகன் பிறந்த உடல் செழிப்பேறிய பிறகு ஒரு நிமிடம் தனியாக அவள் கிடைத்தாலும் ப்ளஸை இழுத்துவிட்டு காம்பை உறிஞ்சுவார். அதோடு இந்த புது நிலையில் நீலகண்டனின் குறி விறைப்படைய தாமதமானது. பாவாடையை மட்டும் அணிந்து கொண்டு விறைப்படைய அவள் உதவ வேண்டியிருந்தது. அடைந்ததும் கவனமாக மேலே ஏறி அமர்ந்தால் மீண்டும் சுருங்கி விடுகிறது. ஒரு வழியாக துளையில் திணித்து அமர்ந்தாள்.


'என்னடி அப்படியே இருக்க மூவ் பண்ணு' என்றார்.


'மூவ் பண்ணா வெளில' வருது என்று அப்பாவியாகச் சொன்னாள். நீலகண்டன் படுத்தவாக்கிலேயே இடுப்பை சற்று உயர்த்தினார். ரயில் நகர்வது போல மெல்லத் தொடங்கி வேகமெடுத்தாள் கமலா. கீழிருந்த கமலாவின் முகமும் தற்போது மேலிருக்கும் கமலாவின் முகமும் ஒன்றல்ல என்று அவருக்குத் தோன்றியது. முலைகள் குலுங்கி முட்டிக்கொள்ள இடக்கையை தலை வழியே பின்னுக்கு கொண்டு சென்று வலப்பக்கம் சரிந்து கிடக்கும் கூந்தலை பிடித்திருப்பவளை அவருக்குப் பிடித்திருந்தது. ஜூலியாவையோ ரேஷ்மாவையோ நாயுடுவையோ கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தனர். இல்லை இல்லை இயங்கியவளின் கீழே கிடந்தார். அந்த இரவினால் டிஸ்சார்ஜ் ஒருவாரம் தள்ளிப் போனதைத் தவிர வேறு பிரச்சினை இல்லை.


ஆனால் பத்துநாள் கழித்து நீலகண்டனின் அலைபேசிக்கு அவர்கள் ஆஸ்பத்திரியில் இயங்கிய வீடியோ வந்தது.


அவர் ரிப்ளையாக 'டேய் மயிரு நல்ல கேமராவில் எடுத்தா என்ன? எம்பொண்டாட்டியோட இருக்கிறத எனக்கே அனுப்புறியா நீ? நம்பர் கண்டுபிடிச்சியே. நான் சைபர் க்ரைம்ல வேலை பாக்குறத கேக்கலயோ. ஓத்தா டேய் இந்த வாய்ஸ்நோட் கேட்டதும் நீ என்ன ப்ளாக் பண்ணுவ. நீ ப்ளாக் பண்ணினாலும் உன்ன குண்டாக்க தூக்கிட்டு போவ ஆறு மணி நேரத்துல போலீஸ் வரும்' என்று அனுப்பினார்.


இருபது வினாடிக்குள் அந்த வீடியோ இருவர் இன்பாக்ஸில் இருந்தும் அழிக்கப்பட்டது. அழுதுகொண்டே தான் ஒரு ஏழைக்குடும்பத்து பையன் என்றும் தன்னை விட்டுவிடும்படியும் செய்தி வந்தது. 


ஊரடங்கு முடிந்து பிள்ளைகள் வெளியூர் போயிருந்தனர். காபியை அவர் கையில் கொடுத்துவிட்டு 'அதென்னங்க சைபர் க்ரைம்' என்று அருகில் அமர்ந்தாள் கமலா. 'யாருக்கு 'தெரியும் ஒரு படத்துல பார்த்தேன்' என்று சொல்லிவிட்டு எழுந்தவர் அந்த வீடியோ நினைவுக்கு வர அவளை இழுத்துக் கொண்டு அறைக்குள் போய் 'மேல ஏறுடி' என்றார். மறக்காமல் அதைப் பதிவும் செய்து கொண்டார். கையில் வெண்ணெய் போல இந்த வீடியோ இருக்க ஜூலியா ஸ்வாதி போன்ற நெய்கள் எதற்கு!


PC

https://theallahabadmuseum.com/events-item/women-in-indian-art/

No comments:

Post a Comment