சாத்தான்

ஆழத்தில் கிடப்பவன்
கூரிய விழிகளால் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்
உங்கள் இயல்பின் மீது நான் கருணை கொள்ளும் போது
உங்கள் சிரிப்பினைக் கண்டு  எனக்குள் தாய்மை சுரக்கும் போது
உங்கள் அழகின்மையை அறிவின்மையை நான் பெருந்தன்மையோடு கடக்கும் போது
அவன் கூர்மை சிரிப்பாகிறது
எல்லாம் சரியாகும் என்று உங்கள் தலையை நான் தடவும் போது
தூய ஆடையுடன் உங்கள் அழுக்குடைய நான் தழுவும் போது
உங்கள் சிக்குப்பிடித்த குழந்தைகளை நான் குளிப்பாட்டும் போது
ஏன் ஏன் என்று எக்காளமிடுறான் அவன்
உங்கள் நாற்றங்களை நான் சகித்துக் கொள்ளும் போது
உங்கள் வன்முறையை நான் ஏற்றுக் கொள்ளும் போதாவது அவன் துணுக்குறுவான் என நான் நம்புகிறேன்
அப்போது அவன் மௌனம் மட்டுமே அடைகிறான்
உங்களால் நான் வெறுக்கப்படும் போது
அடிவயிறு அதிர எச்சிலின் துர்மணம் நிறைந்த உங்கள் வாயால் நீங்களென்னை வையும் போது
என்னை நீங்கள் கொல்ல வரும்போது
அவன் அதிர்ச்சியடைகிறான்
நீங்களென்னை கொன்றுவிட்ட பின்பே அவன் கண்மூடுகிறான்
அடுத்த சாத்தானுக்கான விந்துத்துளிகளை வரலாற்றுக் கருவறையில்  திணித்துவிட்ட திருப்தியுடன்

Comments

Popular posts from this blog

வெண்முரசு நாவல் வரிசை - அறிமுகக் குறிப்புகள்

ஈசல் - சிறுகதை

இலக்கிய விமர்சனம் - பத்துக் கட்டளைகள் - ஒரு சுயபரிசோதனைக் குறிப்பு