Sunday 31 December 2017

நாயகிகள் நாயகர்கள் - சிவமணியன் விமர்சனம்




சுரேஷ் பிரதீப்பின் பெரும்பாலான சிறுகதைகள் என் தோல்பரப்பை முட்களால் குத்தி நாளங்களை தொடுகின்றன. மிகச் சில கதைகள் கண்ணாடிக் கூர்மையுடன் உள்ளுறுப்புகளுக்குள் சென்று கீறி , குருதியிழக்க செய்கின்றன. ஆனால் ஒரு நல்ல சிறுகதை என்பது, முதல் வாசிப்பில், குறிவைத்து தாக்கிய துப்பாக்கி குண்டு போல,  என்னை துளைத்து என்னுள் ஊடுறுவி ஒரு உறுப்பிழப்பு, பாகமிழப்பை ஏற்படுத்த வேண்டும். மீள்வாசிப்பில், நான் அடைந்த வெற்றிடத்தை  அந்த கணம் வரை அறிந்திடாத அற உணர்வுகள்,  புதிய சிந்தனைக் கோணம்,  எண்ணமெழுச்சிகளை அதே கதை,  இட்டு நிரப்ப வெண்டும். அத்தகைய கதைகள் எழுதும்  வல்லமை சுரேஷ் பிரதீப்பின் எழுத்துக்கு இருக்கிறது என  நம்புகிறேன்.

https://sivamaniyan.blogspot.in/2017/12/blog-post_79.html?m=1

No comments:

Post a Comment