Monday 22 August 2016

நூல் ஐந்து - பிரயாகை

நிலைபெயராமை ஒன்றையே நோக்கமெனக் கொண்டு தவமியற்றும் உத்தானபாதனின் மைந்தன் துருவனின் கதையோடு தொடங்குகிறது பிரயாகை. முற்றாக தோற்கடிக்கப்படுதல் முற்றாக கைவிடப்படுதல் முற்றாக வஞ்சிக்கப்படுதல் எனும் நிலைகளில் இருந்து மீண்டு வருபவர்களில் கூடும் சமநிலையின் சித்திரத்தை அளிக்கிறது. நிலைபெயராத துருவனும் நிலை கொள்ளாத ஆகாய கங்கையும் என சுழற்சியின் இரு பெரும் விசைகளை அறிமுகம் செய்கிறது. கங்கையை மண்ணுக்கு இழுக்கும் பகீரதனின் கதையை சொல்கிறது.

படைக்கல பயிற்சிகள் முடிந்ததும் தன் மாணவர்களிடம் பாஞ்சால மன்னன் துருபதனை வென்று தேர்த்தட்டில் கட்டி இழுத்து வருமாறு ஆணையிடுகிறார் துரோணர். போருக்கான முன்னெடுப்புகள் நிகழ்ந்த பிறகு தருமனின் மனம் கொள்ளும் இரக்க உணர்வுகளை அர்ஜுனனும் பீமனும் கையாளும் விதம் எளிமையான நீதியுணர்ச்சியிலிருந்து விடுபட வைக்கிறது. களத்தையும் வியூகங்களையும் வாய்ப்புகளையும் விரிவாக விளக்குகிறது. கௌரவர்கள் கர்ணன் தலைமையில் துருபதனை எதிர்கொள்கின்றனர். நிலைமை எல்லை மீறும் போது அர்ஜுனன் தலைமையில் பாண்டவர்களின் படை களமிறங்குகிறது. அத்தனை கள நியதிகளையும் மீறி துருபதனை தேர்த்தட்டில் கட்டி இழுத்துச் செல்கிறான் அர்ஜுனன். மனம் பதைத்து அவனைத் தடுக்கும் தருமனிடம் பீமன் சொல்லும் நியாயங்கள் இரக்கமற்றவை எனினும் உண்மையே. துருபதனை துரோணர் எதிர்கொள்வதை அர்ஜுனன் காணும் கணங்கள் நுட்பமானவை. நம்பிக்கை இழப்பிற்கு ஆளாகி வதைபடுகிறான். பீமனும் அர்ஜுனனும் மாறுபடுவதன் வழியாகவே தருமனை அறிய முடிகிறது. மூவருக்குமான தொடர்ச்சியான விவாதங்கள் மூலம் அவர்கள் நுண்மையாக வேறுபடும் இடங்களையும் அவர்களை இணைத்திருக்கும் மையத்தையும் அறிய முடிகிறது. அர்ஜுனனின் நிலையழிவை பீமன் எதிர் கொள்ளும் விதமும் மீண்டும் துருவனையும் கங்கையையும் நினைவுறுத்துகிறது. சிக்கலான அரசு சூழ்தல்களில் தருமனுக்கும் குந்திக்கும் இடையே அர்ஜுனன் அலைகழிகிறான். தருமனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டப்படுவதும் அது அர்ஜுனனின் பார்வையில் விரிவதும் அதற்கு முந்தைய அவன் மனநிலையும் நுண்மையாகப் பொருந்துகின்றன.

அவமதிக்கப்பட்ட துருபதனின் மனம் அந்த அவமதிப்பை சந்திப்பது அவர் தோழர் பத்ரரின் பார்வையில் நுணுக்கமாக வெளிப்படுகிறது. தன்னிடமிருந்து தன்னை மறைக்க அகம் கொள்ளும் பாவனைகளும் நடிக்கும் நாடகங்களும் விலக துருபதன் தனித்து நின்று எரிகிறார். மனதில் ஊறிய வஞ்சத்தை களைய முடியாதவராய் அதர்வ வைதிகர்களான யாஜ உபயாஜர்களை கொண்டு நிகழ்த்தும் வேள்வியின் வழியாக தன்னை மீட்டுக் கொண்டு திரௌபதியை பெறுகிறார். நிமிர்வும் கருணையும் கொண்ட பேரழகியாக மண்ணடைகிறாள் பாஞ்சாலி.

இருபதாண்டுகளுக்கும் மேலான காத்திருப்பு பொருளற்றுப் போகவே மீண்டும் காந்தாரம் நோக்கி கிளம்புகிறார் சகுனி. பசித்த கிழ ஓநாயுடனான சகுனியின் விவாதங்கள் பாலைவனத்தின் இரக்கமற்ற கூர்மையைக் கொண்டுள்ளன. ஓநாயால் கடிபட்டு சகுனி மீண்டு வருவதை அவர் அமைச்சர் கிருதர் காண்கிறார். மனதின் பாவனைகள் உடலில் வெளிப்படுவதை சகுனியின் வழியாக காண்கிறார் அவர் தளபதி கிருதர். மருத்துவரான ஊஷரர் சொல்லும் கதையை சகுனியின் ஆழம் நம்பி விடுகிறது. அத்தருணத்தில் கணிகரை சகுனி சந்திக்கிறார். அவருடன் அஸ்தினபுரி மீள்கிறார்.

இளவரசுப்பட்டம் கட்டப்பட்ட பாண்டவர்கள் ஏழாண்டுகள் பயிற்சி முடிந்து சௌவீர மணிமுடியை வென்று திரும்புகின்றனர். திருதராஷ்டிரரை விடுத்து அவர்கள் குந்தியை சந்திக்கும் இடத்தில் முதல் பிறழ்வு நிகழ்கிறது. இளையவர்களான நகுலனும் சகதேவனுமே குந்தியை நோக்கி முதலில் ஓடுகின்றனர். தருமன் தயக்கமின்றி அவர்களைத் தொடர்கிறான். பீமன் திருதராஷ்டிரரை திரும்பி நோக்கியபின் செல்கிறான். அர்ஜுனன் திகைத்து நின்று விடுகிறான். அங்கு நிகழும் உடைவை இயல்பாகவே பெருகிறது. மதுராவை மகதத்திடமிருந்து காக்க உதவி கேட்டு பலராமரின் தூதுடன் துரியோதனன் வருகிறான். எதிரியல்புகளால் தருமனால் அவமதிக்கப்படுகிறான். அர்ஜுனன் மனதில் அக்கணம் தருமனும் இறக்கிறான். கிருஷ்ணனை அர்ஜுனன் சந்திக்கும் இடம் அது. அரசியல் காரணங்களால் துரியோதனனுக்கு படைப்புறப்பாடு மறுக்கப்பட்ட பின் குந்தியிடமிருந்து தனக்கான படையை கிருஷ்ணன் பெறுவதும் விதுரரை விலக்கி நகர்வதும் அவனை நிறுவி விடுகின்றன. அப்படை புறப்பாடும் வெட்டுக் கிளிகள் போல தாக்குவதும் தோழனாகவும் தளபதியாகவும் சிறுவனாகவும் கிருஷ்ணன் அமைவது அர்ஜுனனை உவகை கொள்ளச் செய்கின்றன. தன் ஆசிரியனை கண்டு கொள்கிறான். துரியோதனனின் வஞ்சத்தை கணிகரும் சகுனியும் பெறுக்குகின்றனர். அவரை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார் விதுரர். கௌரவ நூற்றுவர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பாண்டவர்களையும் குந்தியையும் வாரணவதத்தில் எரித்தழிக்க முடிவு செய்கின்றனர் சகுனியும் கணிகரும். விதுரரின் சொற்கள் வழியாக எரிநிகழ்வை உணர்ந்து அங்கிருந்து தப்புகின்றனர் பாண்டவர்கள்.

திரௌபதி இளவயதிலேயே திடமான முடிவுகள் எடுப்பவளாக வளர்கிறாள். அவள் அன்னை பிருஷதியின் விழிகள் வழியாக திரௌபதியின் பேருருவம் வெளிப்படுகிறது. பிருஷதிக்கு விறலி சம்வரணனுக்கும் சூரியனின் மகளான தபதிக்கும் குரு வம்சத்தின் முதலவனான குருவின் பிறப்பு சொல்லப்படுவதன் மூலம் கர்ணனை அறிமுகம் செய்து கொள்கிறாள் திரௌபதி. எரி நிகழ்வில் உயிர் பிழைத்ததும் அரசியாகவே வாழ்ந்த குந்தி அன்னையாகிறாள். அவள் வினதை கத்ரு என இரு சகோதரிகளின் கதையை சொல்வது அவளும் காந்தாரியுமாகவே மனதில் நிற்கிறது. காட்டிற்குள் பாண்டவர்கள் அனைவருமே விடுதலை கொள்கிறார்கள். இடும்பியை பீமன் மணம் கொள்கிறான். குரங்குகள் சூழ நடக்கும் அந்த மணத்தில் சூர்ணன் என்ற குட்டி குரங்கு தருமனை கேலி செய்யும் விதம் புன்னகைக்க வைக்கிறது. குந்திக்கும் தருமனுக்கும் அந்நேரம் நடைபெறும் உரையாடல் கூர்மையானது. கானகத்தினரான இடும்பர்கள் பாண்டவர்களை ஏற்க மறுப்பதற்கான நியாயங்கள் முகத்தில் அறைகின்றன.

கடோத்கஜனின் பிறப்பும் பீமன் அவன் வழியாக தன் நெஞ்சில் ஊறிய கசப்பினை போக்க முயல்வதும் சிலிர்க்கச் செய்கின்றன. வாரணவத எரிநிகழ்வு முடிந்து ஏழு வருடங்கள் கடந்து திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள சாலிஹோத்ர குருகுலத்தில் இருந்து பாண்டவர்கள் புறப்படுகின்றனர். விதுரரின் வழியாக பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை பீஷ்மர் அறிகிறார். குடிகளின் வழியாகவே சகுனியும் கணிகரும் துரியோதனனுக்கு இளவரசுப்பட்டம் சூட்ட வேண்டிய அவசியத்தை உருவாக்குகின்றனர்.

பகனை பீமன் வீழ்த்திய கதை சொல்லும் சூதனுடன் பலராமர் அவை நுழைகிறார். பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்து பட்டம் கட்டுதல் தடைபடுகிறது. அனைத்து சம்பவங்களும் ஒன்றிணைந்து திரௌபதியின் சுயம்வரம் எனும் உச்சம் நோக்கி நகர்வது கதையோட்டத்தில் ஒரு ஒருமையை உருவாக்குகிறது. அணுக்கத்தோழி மாயையின் வழியாக இம்முறை திரௌபதி வெளிப்படுகிறாள். லட்சுமி சாவித்ரி சரஸ்வதி துர்கை ராதை என ஐந்து அன்னையரால் ஆளப்படும் பாஞ்சாலத்தின் ஒவ்வொரு அன்னையின் ஆலயத்திலும் திரௌபதி கர்ணனையும் அர்ஜுனனையும் தருமனையும் பீமனையும் இறுதியாக கிருஷ்ணனையும் காண்கிறாள். ஒவ்வொருவரை காணும் போதும் மாயையுக்கும் திரௌபதிக்கும் இடையே நிகழும் அகப்பரிமாற்றங்கள் மட்டுமே தனியொரு நூலாக எழுதத்தக்கவை. திரௌபதியின் மீதான கர்ணனின் காதலை துரியோதனன் உணர்கிறான். பரசுராமரிடம் வில்வேதம் கற்று மீளும் கர்ணன் தன் அனுபவங்களை துரியோதனனிடம் சொல்வது வலி ஏற்படுத்தும் தருணம். ஐந்து கிளிகளை பொறி வில்லால் வீழ்த்தும் போட்டி சுயம்வரத்தில் அமைக்கப்படுகிறது. சொற்கள் இருக்கை நுனிக்கு இழுத்து வர முடியும் என்ற உண்மையை அப்போட்டி மீண்டும் உணர்த்துகிறது. பிராமணர் வரிசையில் அமர்கின்றனர் பாண்டவர்கள். திரௌபதியின் உள்ளம் போலவே ஒவ்வொருவரையும் தூக்கி எறிகிறது அவ்வில். கர்ணனின் இறுதி அம்பு இலக்கை தவற விடும் இடத்தை மனம் ஒப்பவே மறுக்கிறது. கிருஷ்ணன் நான்கு இலக்குகளை வீழ்த்திய பின் மீண்டு வந்து அமர்கிறான். அர்ஜுனன் போட்டியில் வென்று மீண்டும் வெறுமையையே உணர்கிறான்.

துருபதன் மகளை ஐவருக்கும் மணமுடித்து கொடுக்கும் காரணங்கள் நேரடியாக சொல்லப்படவில்லை எனினும் அதன் அரசியல் உட்பொருள் சொல்லப்படுகிறது. திரௌபதி துருவனைக் கண்டு புன்னகைப்பதோடு முடிவடைகிறது பிரயாகை.

மிக நுட்பமான பல தருணங்கள் நிறைந்த நாவல் பிரயாகை. விதுரரை கிருஷ்ணன் மிரட்டி விலக்கிய பின் அவர் அகத்தில் நடக்கும் மோதல்களும் பாண்டவர்களைக் கொல்ல முடிவெடுத்தபின் கௌரவர்களில் ஒருவனான குண்டாசி அடையும் மனப்பிறழ்வும் மிக முக்கிய திருப்பங்களை விளைவிக்கின்றன. நன்மையை ஏற்று நடிக்கும் பாவனையற்றவனாக நன்மைக்கும் தீமைக்கும் நடுவிலேயே நிற்கிறான் கிருஷ்ணன். அவன் மதுராவை மீட்பதும் துவாரகையை அமைப்பதும் பிறர் சொற்களின் வழியே வெளிப்படுகிறது. அறிய முடியாத பேரிருப்பாகவே கிருஷ்ணன் வெளிப்படுகிறான். அவனுடைய நியாயங்களும் இலட்சியங்களும் திகைத்து நிற்க வைக்கின்றன. கானக மக்கள் வெற்றி கொள்ளப்படுவதன் சித்திரமும் பிரயாகையில் வெளிப்படுகிறது. மகாபாரத்தின் மையப்பாத்திரங்களை பிரயாகை விரித்தெடுத்திருப்பதை வாசித்து முடித்த பின்னரே உணர முடிகிறது. கால அளவிலும் பிரயாகை நெடுந்தூரப் பயணமே.

2 comments:

  1. என் பெயர் மிஸ் போரா, நான் ஒரு கணவருடன் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டோம், நாங்கள் இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தோம், அவர் ஒரு வணிக பயணத்தில் ஆஸ்திரேலியா சென்றபோது அவர் இந்த பெண்ணை சந்தித்தார், அதன்பின்னர் அவர் என்னை வெறுக்கிறார், குழந்தைகள் மற்றும் அவளை மட்டுமே நேசிக்கிறார். எனவே எனது கணவர் பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, ​​அவர் என்னையும் என் குழந்தைகளையும் மீண்டும் பார்க்க விரும்பவில்லை என்று கூறினார், எனவே அவர் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றினார், இப்போது அந்தப் பெண்ணைப் பார்க்க ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார். எனவே என் குழந்தைகளும் நானும் இப்போது மிகவும் விரக்தியடைந்தோம், நான் என் அம்மாவுடன் தான் இருந்தேன், நான் நன்றாக நடந்து கொள்ளவில்லை, ஏனென்றால் என் தந்தை இறந்த பிறகு அம்மா வேறொரு மனிதருடன் திருமணம் செய்து கொண்டார், எனவே அவர் திருமணம் செய்தவர் அவளை நன்றாக நடத்தவில்லை, நான். என் குழந்தைகள் மிகவும் குழப்பமடைந்தனர், நான் என் கணவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கான வழியைத் தேடிக்கொண்டிருந்தேன், ஏனென்றால் நான் அவரை மிகவும் நேசிக்கிறேன், நேசிக்கிறேன், ஒரு நாள் என் கணினியை உலாவும்போது இந்த எழுத்துச் சக்கரம் டாக்டர் பெல்லரின் சாட்சியத்தைக் கண்டேன். ஒரு ஆன்லைன் பெண்மணியைப் பகிர்ந்து கொண்டார், அது என்னை மிகவும் கவர்ந்தது, நான் அதை முயற்சிக்க நினைக்கிறேன். நான் முதலில் பயந்தேன், ஆனால் என் குழந்தைகளும் என் குழந்தைகளும் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்கும்போது, ​​நான் அவரைத் தொடர்பு கொண்டேன், அவர் என் கணவர் என்னிடம் திரும்பி வருவார் என்பதற்காக 24 மணிநேரம் மட்டுமே அமைதியாக வேலை செய்யச் சொன்னார், எனக்கு ஆச்சரியமாக, இரண்டாவது நாள் குழந்தைகளிடம் என் கணவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, நான் டாக்டர் பெல்லரை அழைத்தேன், உங்கள் பிரச்சினைகள் என் குழந்தைக்கு தீர்க்கப்படுகின்றன என்றார். ஆகவே, ஒரு தீய பெண்மணியின் நீண்ட கால மன அழுத்தத்திற்குப் பிறகு நான் எனது குடும்பத்தை மீண்டும் அழைத்து வந்தேன், எனவே டாக்டர் பெல்லரின் அனைத்து உதவியுடனும், இந்த மன்றத்தில் நீங்கள் அனைவரும் என்னுடன் இணைய வேண்டும் என்று ஒரு பெரிய நன்றி டாக்டர் பெல்லர் இதுபோன்ற அல்லது இதே போன்ற பிரச்சினைகள் அல்லது ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்ளும் எவருக்கும் அறிவுரை வழங்கினால், நீங்கள் அவரின் மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ள வேண்டும். மின்னஞ்சல் முகவரி drpellar@gmail.com
    இது சிறப்பு பின்வருமாறு - உ.பி.
    {1) உங்கள் முன்னாள் திரும்ப விரும்பினால்.
    (2) உங்களுக்கு எப்போதும் கெட்ட கனவுகள் இருந்தால்.
    (3) உங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு பெற விரும்பினால்.
    (4) பெண்கள் / ஆண்கள் உங்களுக்கு பின்னால் ஓட விரும்பினால்.
    (5) நீங்கள் ஒரு குழந்தையை விரும்பினால்.
    (6) நீங்கள் பணக்காரராக விரும்பினால்.
    (7) உங்கள் கணவர் / மனைவி என்றென்றும் உங்களுடையதாக இருக்க விரும்பினால்.
    (8) உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால்.
    (9) நீங்கள் எப்படி ஒரு மோசடி மற்றும் உங்கள் பணத்தை திரும்பப் பெற விரும்புகிறீர்கள்.
    (10) உங்கள் விவாகரத்தை முடிக்க விரும்பினால்.
    (11) நீங்கள் ஒரு மனிதனை விவாகரத்து செய்ய விரும்பினால்.
    (12) உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற விரும்பினால்.
    (13) பிரசவத்தின்போது கர்ப்பம்
    (14) எந்த கட்டத்தில் இருந்தாலும் கவலைப்படக்கூடிய வழக்குகள் மற்றும் விவாகரத்துகளை வென்றெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
    (15) விவாகரத்து அல்லது உறவு.
    (16) உங்களுக்கு (H I V), (புற்றுநோய்) அல்லது ஏதேனும் நோய் இருந்தால்.
    (17) உங்கள் குழந்தையையோ அல்லது உங்களை விடுவிக்க பிரார்த்தனை தேவைப்பட்டால்.
    (18) நீரிழிவு நோயை குணப்படுத்தவும், ஹெர்பெஸ் குணப்படுத்தவும், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸை குணப்படுத்தவும், மார்பக புற்றுநோயை குணப்படுத்தவும், புற்றுநோயை குணப்படுத்தவும் விரும்புகிறீர்கள்.
    உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவர் உங்களுக்கு உதவுவார் என்பதை மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள். அவரது மின்னஞ்சல் முகவரி drpellar@gmail.com

    ReplyDelete
  2. டாக்டர் சாங்கோ எழுத்தாளரின் உதவியுடன் எனது கணவருடன் கணக்குகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ள முடிந்தது, எனக்கு மூன்று குழந்தைகளுடன் 47 வயதாகிறது, ஒரு காலை சுமார் 8 மாதங்களுக்கு முன்பு என் கணவர் படுக்கையில் இருந்து எழுந்துவிட்டார், மற்றவர் அதை உடைக்க வேண்டும் என்று கூறினார் அவர் இனி எங்கள் திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை, இந்த வார்த்தைகள் என்னை சமப்படுத்தின, நான் கிட்டத்தட்ட மயக்கம் அடைந்தேன், நான் அவரிடம் பொய் சொன்னேன், என்ன நடந்தது என்று கேட்டேன், ஆனால் அவர் எதுவும் சொல்ல மறுத்துவிட்டார், அதே மாதத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறி என்னை குழந்தைகளுடன் தனியாக விட்டுவிட்டார் உண்மையாக இருங்கள், அது எனக்கு எளிதானது அல்ல, நான் அறியாமலே தவறு செய்தால் மன்னிக்கவும், எல்லா இன்பங்களும் செவிடன் காதில் விழுந்தால் என்னை மன்னிக்கும்படி என்னிடம் உதவி செய்யும்படி அவரது சகோதரிகளிடம் கூட சொன்னார். நான் வேறொரு தளத்திலிருந்து உதவியைத் தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் ஒரு ஆன்மீக மனிதனைப் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்கும் வரை அனைத்தும் தோல்வியடைந்தன - டாக்டர் சாங்கோ என்ற எழுத்தாளர், நான் அவருடைய பிரச்சினையை அவரிடம் விளக்கினேன், நான் அவரிடம் கொடுத்த சில தகவல்களை எனக்குத் தரும்படி அவர் சொன்னார், அவர் வேறொரு பெண்ணால் கையாளப்படுகிறார் என்று அந்த மனிதனுக்கு சரியான மனம் இல்லை என்று அவர் என்னிடம் கூறினார், எனவே அவர் விவாகரத்து கோருகிறார், ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு என் கவலைகள் அனைத்தும் முடிவடையும் என்று நான் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார், நான் மிகவும் ஆச்சரியப்படுவேன் சிறந்த டாக்டர் சாங்கோ கூறிய எழுத்துப்பிழை என் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்து, அவர் வீட்டிலிருந்து எவ்வளவு காலம் விலகி இருந்தார் என்று கூட என்னிடம் கேட்டார், என் திருமணம் டாக்டர் சாங்கோ என்ற ஒரு சிறந்த எழுத்தாளரால் காப்பாற்றப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், விவாகரத்து ஒருபோதும் நடக்காது, நான் பணியிடத்தில் ஒரு பதவி உயர்வு கிடைத்தது, என் வாழ்க்கையில் எல்லாம் ஒரு நல்ல மற்றும் சிறந்த எழுத்தாளராக மாறுகிறது டாக்டர் சாங்கோ இதற்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் திருமண சிக்கல்களை எதிர்கொண்டால், நீங்கள் கருப்பை கருவைத் தேடுகிறீர்களானால், முன்னாள் காதலரை மீட்டெடுக்க விரும்பினால், உங்களுக்கு மகிழ்ச்சியான லாட்டரி எண்கள் தேவைப்பட்டால், உங்களுக்கு பாதுகாப்பு மந்திரங்கள் தேவைப்பட்டால், செல்வத்திற்கான மந்திரங்கள் மற்றும் பல. எந்தவொரு எழுத்துப்பிழைக்கும் டாக்டர் சாங்கோவைத் தொடர்பு கொள்ள தயங்கவும், நீங்கள் அதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், ஏனெனில் உங்கள் இதயத்தின் அனைத்து ஆசைகளும் பூர்த்தி செய்யப்படும். நீங்கள் அவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல்: spellspecialistcaster937@gmail.com

    ReplyDelete